அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 13

– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்

– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 13

அத்தியாயம் 3

தூதுத்துவ நிழலில் தூய பயணம்

ஹிரா குகையில்..!

தூதுத்துவ நிழலில் தூய பயணம்

தூதுத்துவ நிழலில் தூய பயணம்

அவருக்கு அப்போது வயது நாற்பது. அந்த வயதில், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்காவில் அமைந்த அந்-நூர் மலையின், ஹிரா குi உள்ளே சென்று தியானத்தில் ஈடுபட ஆரம்பித்தார். பெரும்பாலான நேரங்களை, குறிப்பாக ரமளான் மாதத்தை அங்கு கழித்தார். ஏகஇறைவன் ஒருவனை மட்டுமே வணங்குவதிலும், தியானத்திலும் ஈடுபட்டார். தனது சமூகத்தாரிடையே மலிந்து கிடக்கும் தீயொழுக்கங்கள் மற்றும் சிலைவணக்க வழிபாடு குறித்து கவலை அடைந்தவராக.., அமைதியற்றவராகக் காணப்பட்டார்.

வானவர் தலைவர் கொணரந்த வான்தூது!

பூரணத்துவ வயதாகக் கணிக்கப்படும் நாற்பதாவது வயதை அடைந்தபோது, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் இறைத்தூதுத்துவ அடையாளங்கள் தென்பட ஆரம்பித்தன. பொதுவாக இந்த வயதில்தான், இறைத்தூதர்கள் அனைவரும், தாம் கொணர்ந்த செய்தியை வெளிப்படுத்துமாறு ஏகஇறைவனால் பணிக்கப்பட்டார்கள். அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஏறக்குறைய ஆற மாதங்கள் வரை அனுபவிக்கக்கூடிய ஒரு உண்மை குறிக்கோள்களாக இருந்தன அந்த அடையாளங்கள்! ஆரம்பத்தில் கனவுகளின் வெளிப்பாடாக இருந்து, அதிகாலையின் தெளிவான விடியலைப் போன்று விடிந்த, இந்த உண்மை இலட்சியப் பயணம், இறைத்தூதுத்துவத்தின் நாற்பத்து ஆறில் ஒரு பங்காக பரிணமித்தது. இதன் தொடர்ச்சியில், அது ரமளான் மாத்தில்.., தனது ஹிரா குகையில் தனது வழக்கமான தஞ்சமடைதலின் மூன்றாம் ஆண்டில்.., அல்லாஹ்வின் பேரருள் இந்த பூமியின் மீது படர எத்தனித்தது.

ஆம்..!

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள். இறைத்தூதர் எனும் மதிப்புடன் கவுரவிக்கப்பட்டார்கள். வேத வெளிப்பாட்டின் உன்னத ஒளி திருக் குர்ஆனின் சில வசனங்களாக.., அந்த மனிதப் புனிதர் மீது படர ஆரம்பித்தது.

அந்த நாளின், சரியான காலத்தை மிக ஆழமாக சென்று கணக்கிட நாடினால், திங்கட்கிழமை, ரமளான் 12-ஆம் நாள் எனவும் அது கி.பி. 610, ஆகஸ்ட் 10 எனவும் தோராயமாகக் கணிக்க முடியும்.

விளக்கமாகக் கூறினால், சத்தியம் (ஜிப்ரீல் (அலை) அவரிடத்தில் தோன்றி, ‘ஓதுவீராக!’ என்றபோது, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மறுமொழிந்தார்கள்: ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே.,!’

அந்த வானவர், அவர் சிரமப்படும் அளவுக்கு அவரை இறுகக் கட்டிக் கொண்டார். பின்னர் அவரை விடுவித்து மீண்டும் கூறினார்: ‘ஓதுவீராக!’ ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே.,!’ என அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்.

வானவர் மீண்டும் அவரை கட்டிக் கொண்டு, அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலாத அளவுக்கு மிக அழுத்தமாக இறுக்கினார். அவரை விடுவித்த பின்னர் மீண்டும் கூறினார்: ‘ஓதுவீராக!’ அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ‘நான் ஓதத் தெரிந்தவன் இல்லையே..!’ என்றார் மீண்டும்..!

அவர் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்க இயலாத அளவுக்கு மூன்றாம் முறையாக மீண்டும், மிக அழுத்தமாக இறுக்கினார். பின்னர் அவரை விடுவித்து கூறினார்:-

ஓதுவீராக! (நபியே!) படைத்த உம் இறைவனின் திருப்பெயர் கொண்டு! (உறைந்த) இரத்தக் கட்டியிலிருந்து மனிதனை அவன் படைத்தான்! ஓதுவீராக! மேலும், உம் இறைவன் மாபெரும் அருட்கொடையாளன் (திருக் குர்ஆன் 96:1-3)

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் திடுக்கிட்டார்கள். அச்சத்தால் நடுங்கினார்கள். தனது துணைவியாரான அன்னை கதீஜா (ரலி) அவர்களிடம் வந்தார்கள். ‘என்னைப் பொர்த்துங்கள்.,! என்னைப் போர்த்துங்கள்..!!’ என்றார்கள்.,!இயல்பு நிலைக்குத் திரும்பியவுடன், குகையில் நடந்த சம்பவத்தை தனது துணைவியிடம் கூறினார்கள். அன்னை கதீஜா கூறினார்கள்: ‘அல்லாஹ் உங்களை கைவிடமாட்டான்.உங்கள் குடம்பத்தாருடன் நீங்கள் நல்ல முறையில் பழகுகின்றீர். பலவீனமானவர்களின் சுமைகளை சுமக்கின்றீர். வறியோருக்கும், தேவையுடையோருக்கும் உதவுகின்றீர்.விருந்தினரை உபசரிக்கின்றீர். உண்மையின் பாதையில் கடுமையாக உழைக்கின்றீர!’

 

வானவர் தலைவர் கொணரந்த வான்தூது!

வானவர் தலைவர் கொணரந்த வான்தூது!

பின்னர், கதீஜா (ரலி) அவர்கள் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை தனது சிறிய தந்தையின் மகனாரிடம் அழைத்துச் சென்றார். வரகா பின் நவ்ஃபல் என்ற அந்தப் பெரியவர் பார்வை இழந்தவர், முதமை தட்டியவர்.அஞ்ஞானக் காலத்தில் கிறித்துவத்தை ஏற்று, பைபிள் வேத நூலை ஹீப்ரு மொழியில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தமக்கு நடந்தவற்றை அவரிடம் விளக்கினார்கள். வரகா பதிலளித்தார்: ‘(உம்மிடம் வந்த) அவர் மூஸா (அலை) அவர்களிடம் அல்லாஹ்வினால் அனுப்பி வைக்கப்பட்ட நமூஸ் (வேத வெளிப்பாட்டின் உண்மைகளை குறித்து அறிந்தவர்) ஆவார். அந்தோ! நான் இளைஞனாக இருந்திருக்கக்கூடாதா..? உமது மண்ணை விட்டும், உம் சமூகத்தார் உம்மை வெளியேற்றும் தருணம் வரை நான் உயிருடன் இருந்திருக்க வேண்டுமே..!’

அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் மிகுந்த ஆச்சர்யத்துடன் வினவினார்கள்: ‘என்ன, என்னை அவர்கள் வெளியேற்றுவார்களா..?’

‘நீர் கொண்டு வந்ததைப் போன்ற செய்தியைக் கொணர்ந்த ஒவ்வொருவரும், இதுபோன்ற விரோதப் போக்குடன்தான் நடத்தப்பட்டார்கள். அந்த நாள் வரும் வரை நான் உயிருடன் இருந்தால், நிச்சயமாக உம்மை மிகத் திடமாக ஆதரிப்பேன்’ என்று உறுதியுடன் உரைத்தார் வரகா! சுpல நாட்களில் வரகா காலமாகிவிட்டார்.

வஹீ எனும் இறைசெய்தி சிறிது காலம் நின்றுபோனது. அதனால் அண்ணலார் முஹம்மத் (ஸல்) மிகவும் கவலையடைந்தார்கள். மனவருத்தப்பட்டு, பதற்றத்தால் மலை உச்சியிலிருந்து கீழே குதித்துவிட பலமுறை முனைந்தார்கள். அவ்வாறு கீழே குதித்து விடுவதற்காக ஏதேனும் மலை உச்சிக்குச் செல்லும்போதெல்லாம், அவர் முன்பாக வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் தோன்றி ‘முஹம்மதே! திண்ணமாக நீர் இறைத்தூதராவீர்! ‘ என்று கூறுவார்கள். இதைக் கேட்டதும் நபி (ஸல்) அவர்களின் பதற்றம் தணிந்து மனம் சாந்தி பெறும். பிறகு (மலை உச்சியிலிருந்து) திரும்பி விடுவார்கள். வஹீ எனும் இறைசெய்தி வருவது தாமதமாகும் போதெல்லாம் அவ்வாறே செய்யத் தலைப்படுவார்கள். மீண்டும் அவர்கள் முன் ஜிப்ரீல் (அலை) தோன்றி முன்னர் போலவே கூறுவார்கள்.

வஹீ எனும் இறைசெய்தி அனுப்பப்படுவதில், சிறிது நாட்கள் காலதாமதம் ஏற்பட்டதற்குக் காரணம் இதுவே: அதாவது, அதன் தாக்கத்தால், அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் அனுபவித்த ஒருவித அச்சத்தைப் போக்கவும், அன்னாரை ஒரு நீண்டகால இறைவெளிப்பாட்டின் தாக்கத்துக்கு அவரை தயார்படுத்தவும்தான்..!

இறைசெய்தி அனுப்பப்படுவதில் ஏற்பட்ட தற்காலிக தாமதம் குறித்து அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள் ஒருமுறை இவ்வாறு கூறினார்கள்: ‘ நான் நடந்துசென்று கொண்டிருந்தேன். அப்போது வானத்திலிருந்து ஒரு அசீரிரி செவியுற்றேன்.மேலே அன்னாந்து பார்த்தேன். ஹிரா குகையில் என்னிடத்தில் வந்த அதே வானவர் வானத்துக்கும் பூமிக்கும் இடைப்பட்ட வெளியில் ஒரு நாற்காலியின் மீது அமர்ந்நிருக்கக் கண்டேன். அவரைக் குறித்துநான் மிகவும் அச்சம் nகொண்டிருந்த காரணத்தினால், நிலத்தில் மண்டியிட்டேன். பின்ர் வீட்டுக் சென்று  ‘என்னைப் போர்த்துங்கள்..! என்னைப் போர்த்துங்கள்..!!’ என்று நடுங்கினேன். ஆப்போது என் இறைவன் இந்த வசனத்தை இறக்கினான்:-

போர்த்திக் கொண்டு படுத்திருப்பவரே! எழுந்து எச்சரிக்கை செய்வீராக! மேலும், உம் இறைவனின் மேன்மையைப் பிரகடனப்படுத்துவீராக! மேலும், உம் ஆடைகளைத் தூய்மையாக்குவீராக! அசுத்தத்திலிருந்து விலகியிருப்பீராக! (திருக் குர்ஆன் 74:1-5)

இந்த வசனங்கள் அருளப்பட்ட பின்னர், அண்ணலார் முஹம்மத் (ஸல்) இரு முக்கிய பணிகளுடன், அல்லாஹ்வின் தூதராக பிரகடனப்படுத்தப்பட்டார்கள்.

முதல் பணி, தயாராகுதல் மற்றும் எச்சிக்கை விடுத்தல்! எல்லாம் வல்ல அல்லாஹ்-வைக் குறித்து தனது மக்களுக்கு அறிவுரை பகருவதும், அவர்தம் பாவச் செயல்களின் விளைவுகள் குறித்து எச்சரிக்கை செய்தல்!

இரண்டாவது பணி, அல்லாஹ்வின் கட்டளைகளுக்குக் கட்டுப்படுதல் மற்றும் மற்றவர்களுக்கு ஒரு அழகிய முன்மாதிரியாகத் திகழ்தல்!

மேற்சொன்ன இறைவசனத்தில் உள்ள மூன்றாவது வசனத்தில் ‘ஃபகப்பிர்’ எனும் சொல்லாடல் இவ்வாறு பொருள்படுகின்றது: அல்லாஹ் ஒருவனை மட்டுடே வணங்க வேண்டும், அவனுக்கு வேறு எவரையும்-எதனையும் இணையாக்கக் கூடவே கூடாது.

நான்காவதாக உள்ள ‘தியாபக ஃபதஹ்ஹிர்’ எனும் வசனம் மொழிரீதியாக இவ்வாறு பொருள்படும்: உமது ஆடைகளையும் நடத்தையையும் தூய்மைப்படுத்துவீராக!’

அடுத்த இறைவசனம், ‘வர்ருஜ்ஸா’ – அரபியர்களின் அஞ்ஞான பழக்கங்களிலிருந்து  விலகியிருக் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களை தூண்டுகின்றது.

இதற்குப் பின்னர், இறைவசனம் மிக ஆணித்தரமாகவும், அடிக்கடியும், வழமையாகவும் இறங்க ஆரம்பித்தது.

Related Post