விலைவாசி ஏன் உயர்கிறது ?

முருகேசன்

நமது ரூபாயின் வாங்கும் திறன் , 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம் , அரசு நோட்டடித்து செலவு செய்வதே ஆகும்.

நமது ரூபாயின் வாங்கும் திறன் , 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம் , அரசு நோட்டடித்து செலவு செய்வதே ஆகும்.

நமது ரூபாயின் வாங்கும் திறன் , 1947 இருந்ததை விட இப்போது சுமார் 160 மடங்கு குறைந்துள்ளது. அதாவது 1947 இன் ஒரு ரூபாய் இன்று 160 ருபாய்க்கு சமம். இதற்கு முக்கிய காரணம் , அரசு நோட்டடித்து செலவு செய்வதே ஆகும்.

சாதரணமாக பொருட்க்களுக்கான தேவை அதிகரிக்கும் போது அல்லது உற்பத்தி குறையும் போது , விலை ஏறுகிறது. மாற்றாக , புழக்கத்தில் இருக்கும் பணத்தின் அளவு மிக அதிகமானால் பணவீக்கம் ஏற்படுகிறது ; அதாவது அரசாங்கம் ரூபாய் நோட்டுகளை அச்சடித்து செலவு செய்யும் போதும் விலைவாசி ஏறும்.
மத்திய பட்ஜட்டில் பல விதமான செலவுகளால் , இப்போது ஆண்டுக்கு சுமார் 1.6 லட்சம் கோடி துண்டு விழுகிறது. இதில் , அரசாங்கம் ஒரு 70 ஆயிரம் கோடி கடன் வாங்குகிறது.
மிச்சதிற்க்கு (சுமார் 90,000 கோடி ரூபாய்) நோட்டடித்து செலவு செய்கிறது. பணவீக்க்ம் உருவாகி விலைவாசி ஏறுகிறது. மிக அதிகமான ரூபாய் நோட்டுகள் மிக குறைவன எண்ணிக்கையில் உள்ள பொருட்க்களை துரத்தும் போது பொருட்க்களின் விலை ஏறுகிறது.
புதிதாக உற்ப்பத்தி செய்ய முடியாத பண்டங்களான நிலம் , ரியல் எஸ்டேட் போன்றவை மிக அதிகமாக விலை ஏறுகிறது.


வட்டி விகிதம் , விலைவாசி உயர்வின் விகிததை ஒட்டியே மாறும். வட்டி என்பது , பணத்தின் வாடகையே. பணத்தின் மதிப்பு குறைய குறைய , வட்டி விகிதம் அதற்கேற்றாற் போல் உயரும். கந்து வட்டி விகிதம் பல மடங்கு அதிகரிக்க இதுவே காரணம்.
1930 களில் காந்தியடிகள் கதர் இயக்கத்திற்காக வங்கியிலிருந்து 5 சதவித வட்டிக்கு கடன் வாங்க முடிந்தது. அன்றய பணவீக்கமும் , விலைவாசி உயர்வும் அப்படி இருந்தன.
பற்றாகுறை பட்ஜெட்களின் விலைவாக 1950 முதல் 1990 கல் வரை பணவீக்கமும். விலைவாசியும் , வட்டி விகிதமும் தொடர்ந்து ஏறின.
ஊதியம் போதாதால் , தொழிளாலர்கள் மற்றும் ஏழைகள் மிகவும் பாதிப்படைகிறார்கள். ஏழைகள் , தங்கள் குழந்தைகளை தொழிலாளர்களாக அனுப்புகின்றனர்.
அதிக வட்டி விகிததில் , கந்து வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலை. கூலி / சம்பள உயர்வு கேட்டு போராட வேண்டிய நிலை. அதனால் உற்பத்தி செலவு அதிகரித்து , விலைவாசி மேலும் உயர்கிறது. சம்பளம் போதாமல் அரசாங்க ஊழியர்கள் லஞ்சம் வாங்க முற்படுகின்றனர்.
ஜெர்மனி போன்ற நாடுகள் பணவீக்கதை மிகவும் கட்டுபடுத்தி விலைவாசியை ஒரே அளவில் வைத்துள்ளன. அதனால் அங்கு சுபிட்சம் பொங்குகிறது. இங்கோ வறுமை வாட்டுகிறது. எவ்வளவு சம்பாதித்தாலும் போதவில்ல்லை.
அரசின் வெட்டி செலவுகளுக்காக , பொது மக்கள் விலைவாசி உயர்வு என்ற மறைமுக வரியை சுமக்க வேண்டியுள்ளது. ஆனால் அடிப்படை பொருளாதார அறிவு இல்லாத இடதுசாரிகளோ தொழில் அதிபர்களையும் , முதலாளிகளையும் காரணமாக சொல்கின்றனர்.
லார்டு கீய்யினஸ் சொன்னது : “..ஒரு நாட்டின் ஒழுக்கதையும் , உயர்ந்த குணத்தைய்யும் அழிப்பதற்க்கு சிறந்த வழி என்ன்வென்றால் , அந்நாட்டின் நாணய மதிப்பை வெகுவாக சீரழிப்பது மூலம்….” ; நாம் அதற்கு நல்ல எடுத்துக்காட்டு. இதை என்று உணர்வோம் ?

Related Post