புனித ஹஜ் கிரியைகள் -ஓர் அறிமுகம்

அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..

அவனியில் எங்கும் காண முடியா ஓர் உன்னத மாநாடு..

புனித ஹஜ் கடமையை கடமையை நிறைவேற்றுபவர் மேற்கொள்ள வேண்டிய கிரியைகள் குறித்து ஒரு சுருக்க விளக்கத்தை இங்கு தருகின்றோம்.!

ஹஜ்-இன் வகைகள்

 1.தமத்து: உம்ரா செய்துவிட்டு நிறைவேற்றப்படும் ஹஜ்

2.இஃப்ராத்:ஹஜ் மட்டும் நிறைவேற்றுவது!

3.கிரான்:உம்ரா-வையும் ஹஜ்-ஜையும் ஒருசேர நிறைவேற்றுவது!

 

ஹஜ்-இன் கிரியைகள்;

இஹ்ராம்

நிய்யத் எனும் எண்ணம்> குளிப்பு>நறுமணம் பூசுதல்,இஹ்ராம் ஆடை அணிதல்,இரண்டு ரக்அத் தொழுதல்

தல்பிய்யா

ஹஜ் தமத்துக்கானது:

லப்பைக் அல்லாஹூம்ம பி உம்ரா-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! உம்ரா-வுக்காக (நான் ஆஜராகிவிட்டேன்)

 ஹஜ் கிரான்-வகைக்கானது:

லப்பைக் அல்லாஹூம்ம பி ஹஜ்ஜ வ உம்ரா – ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! உம்ரா மற்றும் ஹஜ்ஜூக்காக (நான் ஆஜராகிவிட்டேன்)

ஹஜ் இஃப்ராத் வகைக்கானது:

லப்பைக் அல்லாஹூம்ம ஹஜ்ஜன்-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! ஹஜ்;ஜூ-க்காக (நான் ஆஜராகிவிட்டேன்)

தவாஃப்

புனித கஅபா-வுக்குள் நுழைந்த பின்னர் புனிதப் பயணி ஒருவர் தவாஃப் செய்துவிட்டு> இரண்டு ரக்அத் தொழுகின்றார்.

ஸஈ

தமத்து வகை ஹஜ்-இல்> உம்ரா-வுக்காக ஸஈ செய்யப்பட வேண்டியது கட்டாயம்.ஆனால்> கிரான் மற்றும் இஃப்ராத் வகையில் ஸஈ-ஐ தாமதப்படுத்தலாம்.

தமத்து வகை ஹஜ் மேற்கொள்பவர் பின்னர்> தலைமுடியை மழிக்கவோ> குறைக்கவோ செய்கின்றார்.

இவ்வாறு செய்து முடித்தவுடன்> உம்ரா நிறைவேறுகின்றது. பின்னர்> முழுமையாக இஹ்ராமிலிருந்து வெளியேறிவிடுகின்றார்.

தமத்து வகை ஹஜ் செய்பவர் துல்ஹஜ் 8 அன்று ஹஜ்-ஜூக்கான இஹ்ராம் அணிகின்றார். பின்னர்> லப்பைக் அல்லாஹூம்ம ஹஜ்ஜன்-ஆஜராகிவிட்டேன் அல்லாஹ்வே! ஹஜ்;ஜூ-க்காக (நான் ஆஜராகிவிட்டேன்)

எனும் தல்பிய்யா-வை மொழிகின்றார்.

மினா-வை நோக்கி..!

மினா-வுக்கு செல்லும் புனிதப் பயணி அங்கு ளுஹர்> அஸ்ர்> மக்ரிப்> இஷா மற்றும் ஃப்ஜர் தொழுகின்றார்.

அரஃபா நோக்கி..!

துல் ஹஜ் 9-ஆம் நாள் சூரிய உதயத்தின்போது> புனிதப் பயணி அரஃபா நோக்கி பயணமாகின்றார். அங்கு திக்ர் மற்றும் பிரார்த்தனைகளில் ஈடுபடுகின்றார்.

முஸ்தலிஃபா நோக்கி..!

சூரியன் மறையும்போது> புனிதப் பயணி முஸ்தலிஃபா நோக்கி பயணமாகின்றார். அங்கு இரவைக் கழிக்கின்றார்.

மினா-வுக்குத் திரும்புதல்..!

சூரியன் உதயமாவதற்கு முன்னர், அவர் மினா-வுக்கு செல்கின்றார் அங்கு ஜமராத்-அல்-அகாபா-சாத்தானை கல்லெறிதல் கிரியை மேற்கொள்கின்றார்.

குர்பானீ

துல்-ஹஜ் 10 அன்று பலிப்பிராணியை குர்பானீ செய்கின்றார்.தனது தலைமயிரை மழிக்கின்றார் அல்லது குறைக்கின்றார். இப்போது> தனது துணைவியுடன் உடலுறவில் ஈடுபடுவதைத் தவிர்த்து ஏனைய அனைத்தும் அவருக்கு ஆகுமாகி அனுமதிக்கப்படுகின்றது.

மக்கா-வுக்குத் திரும்புதல்..!

பின்னர் புனிதப்பயணி மக்காவை நோக்கி திரும்பி அங்கு ஹஜ்ஜூ-க்கான தவாஃபும் ஸஈ-யும் செய்கின்றார்.

தவாஃபும் ஸஈ-யும் முடித்துவிட்டு மீண்டும் மினா திரும்பகின்றார். அங்கு அவ்விரு நாட்களிலும்>

மூன்று ஜமராத்-களிலும் சாத்தானை கல்லெறிதல் கிரியை-யை நிறைவேற்றுகின்றார்.

பிரியா விடை தவாஃப்

மேற்சொன்ன அனைத்து கிரியையைகளையும் முடித்த ஒரு புனிதப் பயணி இறுதியாக பிரியா விடை தவாஃப் செய்யாத வரை மக்கா-வை விட்டு வெளியேறுதல் கூடாது.

இது தவிர்த்து, மதீனா சென்று அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பள்ளிவாசலைத் தரிசிப்பதும் மிகவும் விரும்பத்தக்கது.

Related Post