Main Menu
قناة الجامع لعلوم القرآن - Al-Jami' Channel for Quranic Sciences

ஒருவன்…, ஒருவன் முதலாளி..!

-அப்மு

ஒருவன்…, ஒருவன் முதலாளி..!

(நபியே!) நாம் உமக்கு வெளிப்படையான வெற்றியை அளித்துவிட்டிருக்கிறோம். உம்முடைய முந்திய, பிந்திய குறைகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும், அவன் தனது அருட்கொடையை உம்மீது நிறைவு செய்து, உமக்கு நேர்வழியைக் காட்டுவதற்காகவும், இன்னும் மகத்தான உதவியை அவன் உமக்கு வழங்குவதற்காகவும்தான்! அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் ‘ஸகீனத்’ நிம்மதியை இறக்கியருளினான்; அவர்கள் தங்களின் நம்பிக்கையுடன் இன்னும் அதிகமான நம்பிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்காக! வானங்கள் மற்றும் பூமியிலுள்ள படைகள் யாவும் அல்லாஹ்வின் வல்லமையின் கீழ் உள்ளன. மேலும், அவன் மிகவும் அறிந்தவனாகவும், நுண்ணறிவாளனாகவும் இருக்கிறான். (அவன் எதற்காக இவ்வாறெல்லாம் செய்துள்ளானெனில்) இறைநம்பிக்கையாளர்களான ஆண்களையும், பெண்களையும் நிரந்தரமாக வாழச் செய்வதற்காக! கீழே ஆறுகள் ஓடிக் கொண்டிருக்கும் சுவனங்களில் நுழையச் செய்வதற்காகவும் மேலும், அவர்களுடைய தீமைகளை அவர்களை விட்டு களைவதற்காகவும்தான். அல்லாஹ்விடத்தில் இது மகத்தான வெற்றியாக இருக்கிறது

ஆண்டவன் உலகத்தின் படைப்பாளி அவன் படைப்பில் நாம் எல்லாம் தொழிலாளி

ஆண்டவன் உலகத்தின் படைப்பாளி
அவன் படைப்பில் நாம் எல்லாம் தொழிலாளி

ண்டவன் உலகத்தின் படைப்பாளி
அவன் படைப்பில் நாம் எல்லாம் தொழிலாளி

உழைக்காமல் வாழ்பவனோ கடனாளி
உழைத்து வாழத் தெரியாதவன் ஏமாளி

உழுதுண்டு வாழ்பவனோ உழவாளி
உழைக்கின்ற அவைருமே உழைப்பாளி

நற்படைப்பாளி அனைவருமே தொழிலாளி
ஆண்டவனே உலகத்தின் முதலாளி..!

Related Post