அஷஷய்க் முஹம்மத் ஸாலிஹ் அல் உதைமீன்(ரஹ்)
கேள்வி:
ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு ஏற்பட்டுவிட்டது. அவள் அறியாமை காரணமாக அந்நாட்களில் நோன்பு நோற்றுள்ளாள். அவள் மீதுள்ள கடமை என்ன?
பதில்:

ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு ஏற்பட்டுவிட்டது. அவள் அறியாமை காரணமாக அந்நாட்களில் நோன்பு நோற்றுள்ளாள். அவள் மீதுள்ள கடமை என்ன?
அவள் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடித்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும். அவள் அறியாமல் செய்திருந்தாலும் மாதத்தீட்டுடைய நேரத்தில் பிடிக்கப்பட்ட நோன்பு ஏற்றுக் கொள்ளப்படவும் மாட்டாது, அது (ஸிஹ்ஹத்) அங்கீகரிக்கத்தக்க நோன்பும் அல்ல. கழா நோன்பைப் பிடிப்பதற்குக் கால வரையறை இல்லை. (அவள் அந்த நோன்புகளைக் கழாச் செய்ய வேண்டும்.)
இதற்கு மாற்றமான ஒரு மஸ்அலாவும் உள்ளது. ஒரு சிறிய பெண் பிள்ளைக்கு மாதத்தீட்டு வந்துவிட்டது. அவள் வெட்கம் காரணமாகக் குடும்பத்தாரக்குச் சொல்லவில்லை. அவள் நோன்பு நோற்பவளாகவும் இருக்கவில்லை. இந்த நிலையில் உள்ள பெண் விடுபட்ட அந்த மாத நோன்பைக் கழாச் செய்ய வேண்டும். ஏனெனில், ஒரு பெண் பருவ வயதை அடைந்து விட்டால் என்பதற்காக அடையாளமாக மாதத்தீட்டு உள்ளது. பருவ வயதை அடைந்துவிட்டால் மார்க்கச் சட்டத்தைப் பேணுவது கட்டாயமாகும் என்ற அடிப்படையில் அவள் பிடிக்காமல் விட்ட அம்மாதத்திற்கான நோன்பைக் கழாச் செய்ய வேண்டும்.
தொகுப்பு: அபூ அப்னான் & இளவேனில்
Arabic
English
Spanish
Russian
Romanian
Hindi
Tagalog
Bengali
Sinhalese
Nepali
