Main Menu
قناة الجامع لعلوم القرآن - Al-Jami' Channel for Quranic Sciences

ஓ.., முஸ்லிம் பெண்ணே.,!

-நேர்வழி

உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!  பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே...!!!

உன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!
பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே…!!!

ன்னுடைய பார்வையைத் தாழ்த்திக்கொள்!!!

பிறருக்கு கொடுத்திருக்கும் (வாழ்க்கை வசதிகளின்) பக்கம் உமது கண்களை நீட்டாதே…!!!

#அசிங்கமான,அருவருப்பான பேச்சுகள்,கேலி,கிண்டல்,புறம்,அவதூறு

ஆகியவற்றில் இருந்து உனது நாவைப்பாதுகாத்துக்கொள்….!!!

#குறைவாக பேசு….!!!

வெட்கமும்,குறைவாக பேசுவது ஈமானின் அம்சமாகும்.

கெட்ட வார்த்தையும்,அதிகமாக பேசுவதும் நயவஞ்சகத்தின் அம்சமாகும்.

(ஆதாரம்-திர்மிதி-1950)

#அந்நிய ஆண்களிடம் பேசும்போது குழைந்து குழைந்து பேசாதே…!!!

எவனது உள்ளத்தில் நோய் இருக்கிறதோ அவன் கெட்ட எண்ணம் கொள்வான்.

#கல்வியை தேடுவதில் ஆர்வமாக இரு.

மதரசா,பள்ளிவாசல் போன்ற இடங்களில்

அடிக்கடி தொடர்பு வைத்துக்கொண்டு

நல்ல விசயங்களின் மூலம் ஈமானைப்பலப்படுத்து…!!!

#நீ அறியாமைக்காலத்துப் பெண் போல

தேவையின்றி வெளியில் செல்லாதே…!!

#உன் தலைமுந்தானையை தாழ்த்திக்கொள்….

வெளியில் செல்லும்போது அலங்காரத்தை

மறைக்க பர்தா அணிந்து கொள்..!!!

அலங்காரம் செய்யப்பட்ட பர்தாக்களை அணியாதே…!!!
வெளியில் செல்லும்போது வாசனைத்திரவியங்களை பூசாதே…!!!

#கணவனுக்காக மட்டுமே அலங்கரித்துக்கொள்…!!!

கணவனுக்கு முழுமையான முறையில் கட்டுப்படு…!!!

சிறந்த மனைவி கணவன் தன்னை பார்க்கும்போது மகிழ்வூட்டுவாள்…!!!

#கணவனுடைய சொத்துக்களையும் உடைமைகளையும்,

குடும்பத்தாரையும் பேணிப்பாதுகாத்துக்கொள்…!!!

#கணவனுடைய விருப்பமில்லாமல்

எந்த ஆணையும் வீட்டிற்குள் அனுமதிக்காதே…!!!

#இரத்தபந்த உறவுகளை இணைத்துக்கொள்.

அவர்கள் வெறுத்த போதிலும் சரியே…!!!

#அண்டை வீட்டினரிடம் நல்ல முறையில் நடந்துகொள்.!!!

#கணவருடைய தாய்,தந்தையரிடம் மரியாதையாகவும்,

பணிவாகவும் நடந்துகொள்….!!!

 

#உங்களுடைய பிள்ளைகளுக்கு நல்ல ஒழுக்கங்களை கற்றுக்கொடு.

அதுவே மிகச்சிறந்த செல்வமாகும்.

#உன் குடும்பத்தாரை ஒவ்வொரு நாளும் தொழ ஏவு….!!!

நரக நெருப்பை விட்டு காப்பாற்று….!!!

#தினமும் குர் ஆனை தமிழாக்கத்துடன் படி..!!!

#உன்னுடைய ஒவ்வொரு மணித்துளிகளை,

நேரங்களை சரியான முறையில் பயன்படுத்து…!!!

வீணும்,வெட்டியுமாக நேரத்தை கழிக்காதே…!!!

#நீ படித்த இந்த உபதேசங்களை செயல்படுத்து…!!!

பிறருக்கும் சொல்…!!!

Related Post