நாம் உண்மையான முஃமின்களா? -தொடர்ச்சி

நாம் உண்மையான முஃமின்களா?

நாம் உண்மையான முஃமின்களா?

ல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸில் வருகிறது: -‘முஃமின்கள் இந்த உலக வாழ்வை நேசித்து மரணத்தை வெறுக்கும் போது, அல்லாஹ் எதிரிகளுக்கு முஸ்லிம்களின் மீதுள்ள பயத்தை போக்கிவிட்டு, முஸ்லிம்களின் உள்ளத்தில் எதிரிகளைப் பற்றிய பயத்தைப் போட்டுவிடுவான்’

நிச்சயமாக இது தான் நடந்திருக்கிறது.
ஆனால்,
முஸ்லிம்கள் ஒன்றுபடும் நாளில்,
நிரந்தரமற்ற இந்த உலகத்தின் ஆடம்பர வாழ்க்கையை விட மறுமையை அதிகமாக நேசிக்கும் போது,
தற்போதைய அவமானத்தை விட மரணத்தை விரும்பும் போது,
மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களுடைய கட்டளைகளுக்கு கட்டுப்பட்டு அவைகளை பின்பற்றி நடக்க ஆரம்பிக்கும் போது,
ஒரே இறைவணை மட்டும் வணங்கக் கூடிய உண்மையான முஸ்லிம்களாக மாறும் போது,
அல்லாஹ்வின் கட்டளைகளை, சட்டங்களை இந்த உலகத்தில் மேலோங்கச் செய்ய முயற்சிக்கும் போது …
அப்போது அல்லாஹ் தன்னுடைய வாக்குறுதியை நிறைவேற்றி முஸ்லிம்கள் இழந்த தங்களின் கவுரவத்தை மீட்க உதவி செய்வான்.


ஆகையால், இன்று ஒவ்வொரு முஸ்லிமின் கடமை என்னவெனில்,
-மனம் திருந்தி அல்லாஹ் மற்றும் அவனது தூதர் (ஸல்) அவர்களின் ஒவ்வொரு கட்டளைக்கும் கட்டுப்பட்டு நடப்பது.
-தன்னால் முடிந்த அனைத்து செயல்களையும் செய்து பிரிந்து பல்வேறு கூறுகளாக போன இந்த சமுதாயத்தை ஒன்று சேர்க்க முயற்சிப்பது
இது தான் இந்த உலகில் அல்லாஹ்வின் சட்ட திட்டங்கள் மேலோங்கச் செய்யப்பட நாம் அளிக்கும் நம்முடைய பங்களிப்பாகும்.
இஸ்லாம் நமக்கு என்ன செய்திருக்கிறது என்று கேட்காமல், நாம் இஸ்லாத்திற்காக என்ன செய்திருக்கிறோம் என்று நமக்கு நாமே கேட்கவேண்டும். நம்முடைய மனசாட்சி கூறும் உண்மை நமக்கு விருப்பமானதாக இல்லாமல் இருந்தால், நம்மை படைத்த அல்லாஹ்வுக்கு பணிந்து ஸுஜுது செய்தவர்களாக பாவமன்னிப்பு கோரவேண்டும். நாம் அல்லாஹ்வின் சட்டதிட்டங்களை இவ்வுலகில் நிலை நிறுத்த, நம்முடைய சக்திக்கேற்றவாறு பாடுபடுவேன் என்று அல்லாஹ்விடம் உறுதியான உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டும். மேலும் இதை முதலில் நம்மிலிருந்தும் பின்னர் நமது குடும்பத்தார்களிடமிருந்தும் ஆரம்பம் செய்யவேண்டும்….
ஆமாம், இதற்கு 50 ஆண்டுகள் அல்லது 200 ஆண்டுகள் அல்லது ஏன் 500 ஆண்டுகள் கூட ஆகலாம். ஆனால் அல்லாஹ்வின் வாக்குறுதி நிலையானது, உண்மையானது, என்றுமே மாறாதது. நாம் இவ்வுலக வாழ்வைவிட மறுமை வாழ்விற்கு முக்கியத்துவம் தந்து, மரணத்தை வெறுப்பதை விட நேசிக்க ஆரம்பித்து, முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயலாற்றினால் இன்ஷா அல்லாஹ் இவ்வுலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாம் மார்க்கமே மேலோங்கி நிற்கும். நானும், நீங்களும் மற்றும் ஒவ்வொரு முஸ்லிமும் அந்த நிலையை அடையும் நாளில் அல்லாஹ் தன் வாக்குறுதியை நிறைவேற்றுவான்.
அல்லாஹ் தன் திருமறையில் அத்தியாயம் 24, ஸூரத்துத் நூர் (பேரொலி), வசனங்கள் 55-57 ல் கூறுகிறான்: –
‘உங்களில் எவர் ஈமான் கொண்டு (ஸாலிஹான) – நற்செயல்கள் புரிகிறார்களோ அவர்களை, அவர்களுக்கு முன்னிருந்தோரை(ப் பூமிக்கு) ஆட்சியாளர்களாக்கியது போல், பூமிக்கு நிச்சயமாக ஆட்சியாளர்களாக்கி வைப்பதாகவும், இன்னும் அவன் அவர்களுக்காக பொருந்திக் கொண்ட மார்க்கத்தில் அவர்களை நிச்சயமாக நிலைப்படுத்துவதாகவும், அவர்களுடைய அச்சத்தைத் திட்டமாக அமைதியைக் கொண்டு மாற்றி விடுவதாகவும், அல்லாஹ் வாக்களித்திருக்கிறான்;
‘அவர்கள் என்னோடு (எதையும், எவரையும்) இணைவைக்காது, அவர்கள் என்னையே வணங்குவார்கள்;’ இதன் பின்னர் (உங்களில்) எவர் மாறு செய்(து நிராகரிக்)கிறாரோ அவர்கள் பாவிகள்தாம்;
(முஃமின்களே!) நீங்கள் கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் தொழுகையை நிலை நிறுத்துங்கள்; இன்னும் ஜகாத்தைக் கொடுங்கள்; மேலும், (அல்லாஹ்வின்) தூதருக்குக் கீழ்படியுங்கள். நிராகரிப்பவர்கள் பூமியில் (உங்களை) முறியடித்து விடுவார்கள் என்று (நபியே!) நிச்சயமாக நீர் எண்ணவேண்டாம். இன்னும் அவர்கள் ஒதுங்குமிடம் (நரக) நெருப்புத்தான்; திடமாக அது மிகக் கெட்ட சேரும் இடமாகும்’
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து எங்களின் பாவங்களை மன்னித்து எங்களுக்கு நேர்வழி காட்டுவாயாக!
யா அல்லாஹ், இந்த உலகில் இஸ்லாத்தை மேலோங்கி நிற்கச் செய்யவும் மேலும் உன்னுடைய வாக்குகளை, சட்டத்திட்டங்களை எல்லாவற்றையும் விட மேலோங்கி நிற்கச் செய்ய நாங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ் தனித்தனியாகவோ, கூட்டாகவோ அல்லது சமுதாயமாகவோ உன்னுயை திருக்குர்ஆனில் கூறப்பட்ட ஒவ்வொரு சட்ட திட்டங்களையும் புரிந்துக் கொண்டு நடப்பதற்கு எங்களுக்கு வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ் புனித குர்ஆனின் வசனங்களைப் புரிந்து கொள்வதற்காக எங்களின் இதய கதவுகளைத் திறப்பாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளுடைய சூழ்ச்சிகளுக்கு எதிராக எங்களுக்கு உதவி செய்வாயாக!
யா அல்லாஹ், இஸ்லாத்தின் எதிரிகளைப் பற்றிய எங்களின் இதயங்களிலுள்ள பயத்தை நீக்கி உன்னைப் பற்றிய பயத்தையும், உன் மீதுள்ள நேசத்தையும் எங்களின் உள்ளங்களில் விதைப்பாயாக!
யா அல்லாஹ், நிரந்தரமற்ற இந்த உலக வாழ்வை விட மறுமை வாழ்வை தேர்ந்தெடுப்பதற்கு எங்களுக்க உதவி செய்து வழிகாட்டுவாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உதவி செய்து, வழிகாட்டி, எங்களின் பாவங்களை மன்னித்து, நிராகரிப்பாளர்களுக்கு எதிராக எங்களுக்க வெற்றியைத் தந்தருள்வாயாக!
யா அல்லாஹ், எங்களுக்கு உன்னுடைய பாதையில் வெற்றியையோ அல்லது உன் வழியில் ஷஹீதுடைய மரணத்தையோ தந்தருள்வாயாக என்று உன்னிடம் மன்றாடிக் கேட்கிறோம்.
யா அல்லாஹ், எங்கள் மீது கருணை காட்டி இஸ்லாத்தின் உம்மத்துக்களை ஒரே உம்மத்தாக ஆக்கியருள்வாயாக. ஆமீன்!
அல்லாஹ் எனக்கும், உங்களுக்கும் கருணை புரிந்து நம் அனைவருக்கும் இஸ்லாத்தின் நேரான பாதையைக் காட்டுவானாகவும்!

நன்றி :  www.islamhelpline.com 

தொடர்புடைய ஆக்கங்கள்:

நாம் உண்மையான முஃமின்களா?

 

Related Post