Main Menu
أكاديمية سبيلي Sabeeli Academy

எய்ட்ஸ் இல்லாமல் போக இஸ்லாம்..!

 

எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1 ஆம் நாள் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது..

எய்ட்ஸ் தினம் டிசம்பர் -1 ஆம் நாள் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது..

ய்ட்ஸ் தினம் டிசம்பர் -1 ஆம் நாள் உலகளாவிய ரீதியில் கொண்டாடப்படுகின்றது.. இதன் கொடூரத்தன்மையில் இருந்து உலகம் மீட்சிபெறுவதற்கு மேற்கினால் முன்வைக்கப்படும் எந்தத் தீர்வும் இதுவரை பலனளித்ததாக சான்றுகள் இல்லை. காரணம் இவர்கள் ‘மனோ இச்சையின் அடிப்படையிலான சமூக கட்டமைப்பை’ வடிவமைத்து ‘சுதந்திரம்’ எனும் எண்ணக்கருவினூடாக மக்களை வழிதவறச்செய்வதுடன் ‘தாராண்மை வாதச் சிந்தனையின்’ அடிப்படையில் சகலவிதமாக அநாச்சாரங்களையும் அரங்கேற்றி ‘முதலாளிகளது நலன்கள்’ காக்கப்படுவதனை உறுதிசெய்கிறார்கள்.

மேலும் மனிதனை மிருகத்திலும் கேவலமான நிலைக்கு இட்டுச் செல்லும் படியான சட்டங்களை தாங்கள் வகுத்த சுதந்திரம் பற்றிய எண்ணக்கருவினூடாக விதைக்கிறார்கள்.

‘தன்னினச் சேர்க்கையினாலும்’ ‘தகாத பாலியல் உறவினாலும்’ ‘போபை; பொருள்கள் பயன்பாட்டினாலுமே’ பெருந்தொகையான மக்கள் இந்த எய்ட்ஸ் நோயின் கொடிய தாக்கத்திற்கு உட்படுவாதாக றுர்ழு அறிக்கையிடுகிறது.

 உங்கள் சிந்தனையை தூண்டுவதற்கான சில புள்ளிவிபரம்…

1.WHO-வின் 2010 அறிக்கையின் படி அமெரிக்காவில் 1.3 மில்லியன் மக்கள் எய்ட்சினால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளனர் இவர்களில் பெரும்பாலானவர்கள் ஓரினச் சேர்க்கை, தகாத பாலியல் உறவு மற்றும் போதைப் பொருட்கள் பயன்பாட்டாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 2. ஐரோப்பாவில் 2.3 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிக்கப்பட்டு அவதிப்படுகிறார்கள்.

 3. ஆசியாவில் சுமார் 5 மில்லியன் மக்கள் எயிட்சினால் பாதிப்புற்றுள்ளார்கள்.

 4. அதே நேரம் 2011 ஆண்டின் புள்ளி விபரப்படி WHO- ஆல் பாதிக்கப்பட்ட உலகமக்கள் தொகை 34 மில்லியன் என்பது றுர்ழு வினது தகவலாகும்.

இவ்வாறான இழிநிலையில் இருந்து உலகம் மீட்சிபெறவேண்டுமாயின் மனிதன் பிரபஞ்சங்களின் அதிபதியான ‘ரப்புல் ஆலமீனுடைய வாழ்வியல் ஒழுங்கையும், வழிகாட்டலையும்’ தமது வாழ்வில் எடுத்தொழுகினால் மாத்திரமே உலகின் இந்த இழிநிலையில் இருந்து மீட்சி பெறமுடியும்.

இவ்வாறான இறைவனது வாழ்வியல் ஒழுங்கை உலகில் மீண்டும் நடைமுறைப்படுத்தத் தேவையான சகல அதிகாரத்தையும் தன்னகத்தே கொண்ட ‘இஸ்லாமிய தலைமை நபி வழியில் மீண்டும் உருவாக்கப்பட வேண்டும்’.

இதற்கு இஸ்லாம் பற்றிய சிந்தனைத்தெளிவையும் அது வாழ்வின் அனைத்துக்குமான தீர்வைக் கொண்ட வாழ்க்கைச் சித்தாந்தமாக உலகில் தஃவா முன்னெடுப்புக்கள் அவசியம் மேற்கொள்ளப்படவேண்டும். அதன் வாழ்வியல் முன்மாதிரிகளை தமது வாழ்வில் எடுத்தொழுக ஒவ்வொரு முஸ்லிம் இளைஞனும் யுவதியும் உறுதி பூணவேண்டும். மேற்கினது வாழ்க்கை முறையில் உள்ள மாயையுள் சிக்கிச் சீரழிந்து நிம்மதி இழப்பதனை கைவிட வேண்டும். இஸ்லாத்தை வாழ்வின் முன்மாதிரியாக கொள்ளவேண்டும்.

 

 

Related Post