இறை அற்புதங்களுக்கு ஏது எல்லை..!

– மு.அ.அப்துல் முஸவ்விர்

இறை அற்புதங்களுக்கு ஏது எல்லை..!

இறை அற்புதங்களுக்கு ஏது எல்லை..!

இறை அற்புதங்களுக்கு ஏது எல்லை..!

இறைசட்டங்களைத் தூக்கிப் பிடித்தால் மனிதன் நினைக்கின்றான் அதனைத் தொல்லை..!!மனித நலன்களுக்காகவேயன்றி இறைச்சட்டங்கள் வேறெதற்கும் இல்லை..!!

கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர் அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின் ஒரு வசனம்…! ஆந்த வசனம் இதுதான்;-
தலாக்-விவாக விலக்கு சொல்லப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை தாமாகவே பொறுத்திருக்க வேண்டும். தங்களுடைய கருவறைகளில் அல்லாஹ் எதையேனும் படைத்திருப்பானேயானால் அதை மறைப்பது அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்ல! அல்லாஹ்வின் மீதும், இறுதித் தீர்ப்பு நாளின் மீதும் அவர்கள் நம்பிக்கை கொண்டவராக இருந்தால் ஒருபோதும் அவர்கள் இவ்வாறு செய்யக்கூடாது! அவர்களின் கணவர்கள் (முன்னிருந்த) உறவைச் சரிப்படுத்திக்கொள்ள விரும்பினால், இத்தவணைக்குள் அவர்களை மீண்டும் மனைவியாக்கிக் கொள்ள அவர்களுக்கு முழு உரிமை இருக்கிறது.
அhதவது, விவாக விலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே -அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்
இந்த வசனத்தைப் படித்தபோதுதான் இராபர்ட் மனம் மாறினார்.
இராபர்ட் நீண்ட காலமாக டி.என்.ஏ. எனும் மரபணு ஆய்வை மேற்கொண்டிருந்தார். கைவிரல் ரேகைப் பதிவு ஒரு மனிதனை அடையாளம் காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ. ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில் பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்’ என்பது இராபர்ட்டின் ஆய்வு முடிவு. அதையே திருக் குர்ஆனின் இவ்வசனம் கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்; திருக் குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாக எகிப்தைச் சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்: அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே இராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில் இணைந்துள்ளார். தம்பதியர் உடலுறவு கொண்டால் ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப் பிறகே முற்றாக அழியும் என்று இராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில் கள ஆய்வில் இறங்கினார் அவர்..!அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில் அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வௌ;வேறு ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
இராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம் மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப் பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து மூன்று மாத ‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. – மரபணு ரேகைப் பதிவு முற்றாக அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல் மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
பாருங்கள் இறைவிதிமுறைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் மானுடநலன் இரகசியங்களின் தாத்பர்ய உன்னதத்தை..!உணருங்கள் இறைவல்லiமியத் தூக்கிப் பிடிக்கும் தூய இஸ்லாத்தை..!

Related Post