இணைவைப்பின் வகைகள் – 2

–  அபூ அம்மார் யாசிர் அல் காழி

– தமிழில் : ஆ. ர்.. ஜவாஹிருல்லாஹ்

இணைவைப்பின் வகைகள் – 2

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

அல்லாஹ்வைத் துதித்துக் கொண்டிருக்கின்றது வானங்களில் உள்ள, பூமியில் உள்ள ஒவ்வொன்றும்! ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது; புகழும் அவனுக்கே உரியதாகும். மேலும், அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றலுடையவன். 64:2 அவனே உங்களைப் படைத்தான். பிறகு, உங்களில் சிலர் நிராகரிப் பாளர்களாய் இருக்கிறார்கள். சிலர் இறைநம்பிக்கையாளர்களாக விளங்குகின்றார்கள். மேலும், நீங்கள் செய்கின்ற அனைத்தையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கின்றான்.

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

‘ரியா”வினால் ஏற்படும் அபாயங்கள் ஏராளமானவை. இதனால் தான் நபிகள் நாயகம் முஸ்லிம் சமுதாயத்தின் மீது தமக்குள்ள அன்பு மற்றும் அக்கறையின் காரணமாக, ஏனைய சீர்கேடுகளை விட ரியாவைக் குறித்தே அதிகம் கவலைப்பட்டுள்ளார்கள்.


மஹ்மூத் பின் லபீத் அறிவிக்கின்றார்கள்: அல்லாஹ்வின் தூதர்; அவர்கள் சொன்னார்கள். ‘நான் உங்கள் விஷயத்தில் மிகவும் அச்சப்படுவது சிறிய இணைவைப்பைப் பற்றித் தான். சிறிய இணைவைப்பு என்றால் என்ன அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்ட போது, அவர்கள் ‘ரியா” என்று பதிலளித்தார்கள். ஆதாரம்: முஸ்னத் அஹ்மத்

மற்றொரு நபிமொழியில் தஜ்ஜாலின் தீங்குகளை விட அதிகமாகத் தனது சமுதாயத்தினரை ‘ரியா” பாதிக்குமோ என்று இறைத்தூதர் அஞ்சியிருப்பது வெளிப்படுகின்றது.

அபுஸையீத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ‘நாங்கள் தஜ்ஜாலைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது, எங்களிடையே அல்லாஹ்வின் தூதர்; வந்தார்கள். தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட அதிகமாக நான் உங்கள் விஷயத்தில் அஞ்சுவது குறித்து தொிவிக்கவா? அது மறைவான ஷிர்க் (இணைவைப்பாகும்.) ஒரு மனிதர் தொழுகைக்காக எழுகின்றார். மனிதர்கள் தன்னை உற்று நோக்குகின்றார்கள் என்பதற்காக அவர் தனது தொழுகையை அலங்காித்துக் கொள்கிறார்.” என்று கூறினார்கள். ஆதாரம்: இப்னுமாஜா

இந்த நபிமொழியை நாம் அலசிப் பார்க்கும் போது, ‘ரியா”வின் உண்மையான அபாயங்களை உணர முடியும். ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்ட காலம் முதல், இறுதித் தீர்ப்பு நாள் வரை, மனித குலம் அனுபவிக்கும் மிகப் பெரும் சீர்கேடு தஜ்ஜாலினால் ஏற்படுவது தான். நபி நூஹ் (அலை) முதல் அனைத்து இறைத் தூதர்களும் தங்கள் சமுதாயத்தவர்களிடம் இந்தப் பேரபாயம் குறித்து எச்சாித்துள்ளார்கள். தஜ்ஜாலுடைய காலத்தில் வாழும் மக்கள் அவனை விட்டு ஓடிவிட வேண்டுமென்றும், ஒவ்வொரு ஃபர்ளான தொழுகைக்குப் பிறகும் அவர்கள் தஜ்ஜாலின் அபாயங்களிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடவேண்டுமென்றும், அண்ணல் நபி அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கின்றார்கள். இருப்பினும், தஜ்ஜாலினால் விளையும் அபாயங்களை விட ‘ரியா” வினால் ஏற்படும் தீங்குகள் குறித்துத் தான் அதிகமாக அஞ்சுவதாக மேலே குறிப்பிட்ட தனது அமுத மொழியில் நபிகளார் அவர்கள் கூறியுள்ளார்கள்.

யாருக்கு உள்ளம் உள்ளதோ அல்லது கவனமாகச் செவியுறுகிறாரோ அவருக்கு இதில் படிப்பினை உள்ளது. (திருக்குர்ஆன் 50:37)

‘ரியா” மறைவான தன்மையுடையது. எனவே, அதன் அபாயங்கள் மேலும் கடுமையானதாக அமைந்துள்ளன.

அபூமூஸா அல் அஷ்அரீ அவர்கள் அறிவிக்கின்றார்கள். அண்ணல் நபி அவர்கள் ஒரு நாள் எங்களுக்குப் பிரசங்கம் செய்தார்கள். அப்போது அவர்கள், ‘மனிதர்களே! இந்த இணைவைப்பை (அதாவது ரியாவை)க் குறித்து அஞ்சிக் கொள்ளுங்கள். ஏனெனில், ஒரு எறும்பு ஊர்ந்து செல்வதைக் காட்டிலும் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.” ஆதாரம்: ஸஹீஹ் அல் தா;கீப் வல் தா;ஹீப்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.
‘நிலவில்லாத ஓாிரவின் நடுவில், கருமை நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் எறும்பை விடப் புலப்படாத ஒன்றாக அது அமைந்துள்ளது.”  ஆதாரம்: தஃப்ஸீர் இப்னு கதீர்

(இன்னொரு சிறிய இணைவைப்பு குறித்து இப்னு அப்பாஸ் இந்தக் கருத்தை வெளியிட்டிருந்த போதிலும், ரியா போன்ற சிறிய இணைவைப்பிற்கும் இது பொருந்துவதாக அமைந்துள்ளது.)

ரியாவின் தீங்கிலிருந்து தன்னைக் காப்பாற்றுமாறு இறைத்தூதர்; அவர்கள் கூட அல்லாஹ்விடம் பிரார்த்தனை புரிந்துள்ளார்கள். இறுதி ஹஜ் பயணத்திற்கு முன்பு அவர்கள் அல்லாஹ்விடம்:-

‘அல்லாஹ்வே! இந்த ஹஜ்ஜை ரியா இல்லாத அல்லது பகட்டு இல்லாத ஹஜ்ஜாக ஆக்கியருள்வாளாக” என்று பிரார்த்தனை புரிந்தார்கள். ஆதாரம்: ஸஹீஹ் அல் ஜாமி

இனி ரியாவின் சில தீங்குகளைக் காண்போம்.

1. ஈமானையும், தவ்ஹீதையும் பலவீனப்படுத்துகின்றது.
அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்:
 ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்குகாகவே தவிர நான் படைக்கவில்லை. (திருக்குர்ஆன் 51:56)

‘ரியா”வில் ஈடுபடும் ஒரு மனிதன் தான் படைக்கப்பட்டத்தின் நோக்கத்தையே அழித்து விடுகின்றான். ஏனெனில், அல்லாஹ்வை உண்மையாகவே வணங்குவதற்குப் பதிலாக, அல்லாஹ்வை வணங்குவதைப் போல் பாசாங்கு செய்து, அல்லாஹ்வுடைய படைப்புகளின் திருப்தியையும், பாராட்டுதலையும் பெறுவதற்கு அவன் விரும்புகிறான்.

உண்மையான நம்பிக்கையாளர்கள் யார் என்பதை அல்லாஹ் தெளிவுபடுத்தியுள்ளான்.
உண்மையான நம்பிக்கையாளர்கள், அல்லாஹ்விற்காக மட்டுமே வணக்கத்தில் ஈடுபடுவார்கள். தங்கள் வணக்க வழிபாடுகளுக்காக மற்றவர்களிடமிருந்து அவர்கள் எவ்வித வெகுமதியையோ, நன்றியையோ எதிர்பார்க்க மாட்டார்கள். இதனை அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் விளக்கியுள்ளான்:

அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும் கைதிக்கும் உணவளிப்பார்கள். ‘அல்லாஹ்வின் திருப்திக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து நன்றியையோ பிரதிபலனையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை” (எனக் கூறுவார்கள்) (திருக்குர்ஆன் 76:8,9)

 

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

ரியாவினால் ஏற்படும் அபாயங்கள்

தொழுகை, நோன்பு போன்ற அத்தியாவசியக் கடமைகள் மட்டுமில்லாமல், தேவையுடைய மக்களுக்கு உதவிடுவதும் வணக்கம் தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்வின் அடிப்படை வசதிகள் தங்களுக்குத் தேவைப்பட்ட போதும் கூட, அவற்றைத் தேவையுள்ளவர்களுக்கு பிரதிபலன் பாராது, வழங்க உண்மையான நம்பிக்கையாளர்கள் தயங்க மாட்டார்கள். அல்லாஹ் அவர்களுக்கு அளிப்பதாக வாக்களித்துள்ள மாபெரும் அருட்கொடைகளுடன், தங்களது உதவிகளைப் பெற்றவர்கள் காட்டும் நன்றி விசுவாசத்தை எவ்வகையிலும் ஒப்பிட முடியாது என்பதை அவர்கள் நன்குணர்ந்து இருக்கின்றார்கள்.

திருப்திப்படுத்துவதற்குத் தகுதியானவன் அல்லாஹ் ஒருவன் மட்டுமே, அல்லாஹ் ஒருவனே வணங்கப்படுவதற்கும் தகுதியானவன் என்பதை உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் உணர்ந்தே செயல்படுவார்கள். இதற்கு எதிர்மறையான நயவஞ்சகர்களைப் பற்றி அல்லாஹ் பின்வருமாறு திருக்குர்ஆனில் விமர்சிக்கின்றான்:

தமது தொழுகையில் கவனமற்று பிறருக்குக் காட்டுவதற்காக தொழுவோர்க்குக் கேடுதான். (அவர்கள்) அற்பமானதையும் (கொடுக்க) மறுக்கிறார்கள். (திருக்குர்ஆன் 107:4-7)

சூரா அந்நிஸாவிலும் அல்லாஹ் நயவஞ்சகர்களைப் பின் வருமாறு வர்ணிக்கின்றான்.
நயவஞ்சகர்களய் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். அல்லாஹ்வைக் குறைவாகவோ நினைவு கூர்கின்றனர். (திருக்குர்ஆன் 4:142)

இறை நம்பிக்கை (ஈமான்) மற்றும் ஏகத்துவம் (தவ்ஹீத்) மீதான பிடிப்பை ‘ரியா” எவ்வாறெல்லாம் ஆட்டம் காண வைக்கும் என்பதற்கு இந்த திருக்குர்ஆன் வசனங்கள் எச்சாிக்கையாக அமைந்துள்ளன.

 2. இணைவைப்பின் சிறிய வடிவம்!
அண்ணல் நபி அவர்கள் சொன்னார்கள்:
‘ஒருமனிதர் தொழுவதற்கு எழுந்து நிற்கிறார். மக்கள் தன்னை நோக்குகின்றார்கள் என்று தொிந்து கொண்டதால் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்கிறார். இதுவே மறைவான இணை வைப்பாகும்.” ஆதாரம்: இப்னு மாஜா, மிஷ்காத் அல் மஸாபீஹ்.

‘ரியா”வுடன் செயல்படும் ஒரு மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்குவதற்கு நாடுவதில்லை. ஆனால், ‘எண்ணத்தில் இவைணைப்பை” வைக்கும் மனிதன், அல்லாஹ்வைத் தவிர வேறொன்றை வணங்க உண்மையில் நாட்டம் கொள்கிறான். உதாரணமாக, சிலையை வழிபடும் முஸ்லிமல்லாத ஒருவர், அந்தச் சிலையிடம் பிரார்த்திக்க வேண்டும், அதற்காக நேர்ச்சை கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டுள்ளார். இது எண்ணத்தில் வைக்கப்படும் இணைவைப்பு வகையைச் சார்ந்ததாகும். இதற்குக் காரணம், அந்தச் சிலையினால் தனக்கு நன்மையையோ, தீமையையோ செய்வதற்கு இயலும் என்று அவர் நம்புகிறார்.

ஆனால், மக்களிடம் நற்பெயர் வாங்குவதற்காகத் தனது தொழுகையை அழகுபடுத்திக் கொள்ளும் ஒரு முஸ்லிம், அம்மக்களைத் தொழுகின்றார் என்று சொல்லி விட முடியாது. மக்களின் அபிமானத்தைப் பெறுவதே அவரது நோக்கம். அவர்களை வணங்குவது அவரது நோக்கம் அல்ல. அவரது செயல் மறைமுகமாக அல்லாஹ்வைத் தவிர மற்றவற்றை வணங்கும் செயலாகவே அமைந்துள்ளது. எனவே, ‘ரியா”வும், ‘எண்ணத்தில் இணைவைப்பும்” சமமானவை அல்ல.

அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.
நிச்சயமாக தனக்கு இணைவைக்கப்படுவதை அல்லாஹ் மன்னிப்பதில்லை. இதைத் தவிர அனைத்துப் பாவங்களையும் தான் நாடுகிறவர்களுக்கு மன்னித்து விடுகிறான்.
(திருக்குர்ஆன் 4:48)

நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்துவிடும். நஷ்டமடைந்தவராவீர் என்று உமக்கும், உமக்கு முன் சென்றோர்க்கும் அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன் 39:65)

இந்த வசனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள இணைவைப்புகள் பெரும் இணைவைப்பு வகையைச் சேர்ந்தவையாகும். ஆனால், இவ்வசனத்தில் குறிப்பிட்டுள்ளவை சிறிய வகை இணைவைப்பிற்கு பொருந்துமா? இவ்விஷயத்தில் கருத்து வேறுபாடுகள் நிலவிய போதும், ரியா இந்த வகையைச் சேர்ந்தது அல்ல. மாறாக, அது பெரும் பாவங்களில் (அல் கபாயிர்) ஒன்றாக விளங்குகின்றது என்று கூறுவது நலமாகும். (அல்லாஹ் நன்கு அறிந்தவன்) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில், (அல்லாஹ் அல்லாத மற்றவர்களை வணங்குவது போன்ற) பெரும் இணைவைப்பு ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்திலிருந்து வெளியேற்றி விடுகின்றது: முடிவில்லாத நரகத்தை அவனுக்கு நிச்சயமாக்குகின்றது: அவனது நற்செயல்கள் அனைத்தையும் அழித்து விடுகின்றது. சிறிய வகை இணைவைப்பு, ஒரு மனிதனை இஸ்லாத்தின் வட்டத்தை விட்டு வெளியேற்றுவதில்லை.

ஆனால், ரியாவினால் பாதிக்கப்பட்ட நற்செயற்களுக்கானக் கூலிகளை அது ரத்து செய்து விடுகின்றது. அம் மனிதனின் நற்செயல்கள் அனைத்தும் சிறிய வகை இணைவைப்பினால் அழிவதில்லை. சிறிய வகை இணைவைப்பு செய்தவருக்கு நரகம் நிச்சயம் உண்டு என்று சொல்ல முடியாது. அல்லாஹ் நாடினால் அவரை மன்னித்து விடலாம்.

3. வழிகேட்டை அதிகாிக்கும்
ரியாவில் ஈடுபடும் மனிதனின் உள்ளத்தில் நோய் உள்ளது என்பதில் சந்தேகமில்லை. இந்த நோயை குணப்படுத்தாவிட்டால், அது மேலும் பிரச்சனைகளை ஏற்படுத்தி விடும். திருக்குர்ஆனில் வல்ல இறைவன் பின்வருமாறு கூறுகிறான்.

அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை. அவர்களின் உள்ளங்களில் நோய் இருக்கிறது. அல்லாஹ்வும் அவர்களுக்கு நோயை அதிகமாக்கி விட்டான். பொய் சொல்வோராக இருந்ததால் அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.
(திருக்குர்ஆன் 2:9,10)

அண்ணல் நபி அவர்களின் தோழர்கள் காலத்தில் நடைபெற்ற பின்வரும் சம்பவத்தில் நாம் இதற்கு ஒரு எடுத்துக்காட்டைக் காண முடிகிறது.

ஜாபிர் இப்னு சமூரா அறிவிக்கிறார்கள்: உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களின் ஆட்சியின் போது, கூஃபா நகரவாசிகள் சிலர் தங்களுக்கு ஆளுநராக அனுப்பப்பட்ட சஅது இப்னு அபி வக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி புகார் தொிவித்தார்கள். இந்த புகாரைப் பற்றி விசாாிக்க உமர் (ரலி) அவர்கள் அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்களை அனுப்பி வைத்தார்கள். இருப்பினும் அவர்கள் தொடந்து உமர் (ரலி) அவர்களிடம் மென்மேலும் புகார்களைக் கூறிய வண்ணம் இருந்தார்கள். சஅத் (ரலி) அவர்களுக்கு சரியாகத் தொழக்கூடத் தொியவில்லை என்றும் கூட அவர்கள் புகார் சொன்னார்கள். இச்சூழலில் உமர் (ரலி) சஅதை அழைத்து அவர்களது தொழுகையைப் பற்றி விசாாித்தார்கள். சஅத் (ரலி) அவர்கள் இதற்கு பின்வருமாறு பதிலளித்தார்கள்.

‘அல்லாஹ்வின் மீது ஆணையாக, அண்ணல் நபி அவர்கள் எவ்வாறு தொழுதார்களோ அதே முறையில்தான் நான் தொழுதேன். இதில் நான் எந்த வகையிலும் குறை வைக்கவில்லை. இஷா தொழுகையின் முதல் இரண்டு ரக்அத்துகளை நீட்டியும், பிந்தைய இரண்டு ரக்அத்துகளையும் சுருக்கியும் தொழுவேன்” இப்பதிலைக் கேட்ட உமர் (ரலி) அவர்கள் ‘உங்களிடமிருந்து நான் எதிர்பார்த்தது இதனைத் தான்” என்று பதிலளித்தார்கள்.

இதன் பிறகு மக்களிடம் நேரடியாக விசாரணை நடத்துவதற்காக பல தூதா;களை உமர் (ரலி) அவர்கள் கூபாவிற்கு அனுப்பி வைத்தார்கள். இத்தூதர்கள் சென்ற ஒவ்வொரு பள்ளிவாசலிலும் அவர்கள் மக்களிடம் சஅதைப் பற்றி விசாாித்தார்கள். அவர்கள் சென்ற ஒவ்வொரு இடத்திலும் சஅதைப் பற்றிய பாராட்டுரைகளைத் தான் மக்களிடமிருந்து கேட்க முடிந்தது. அப்ஸ் கோத்திரத்தாாின் பள்ளிவாசலுக்கு தூதர்கள் சென்ற போது உஸாமா இப்னு கத்தாதா என்றமனிதர் எழுந்து நின்று ‘உங்களுக்கு உண்மை தொிய வேண்டுமெனில் நான் சொல்வதைக் கேளுங்கள். படைகளுடன் சேர்ந்து சஅத் போர்புரிவதற்குச் செல்வதில்லை. போாில் கிடைத்த பொருட்களையும், அவர் நியாயமாக பகிர்ந்தளிப்பதில்லை” என்று கூறினார். இதனைக் கேட்ட சஅத் (ரலி) அவர்கள் ‘இறைவா! நான் உன்னிடம் இரண்டு விஷயங்களைக் கேட்கிறேன். உனது இந்த அடியார் (அதாவது உஸாமா) ஒரு பொய்யராக இருந்தால், ரியாவிற்காக, பிரபலமடைவதற்காக எழுந்து நின்றிருப்பாரேயானால், அவரது வாழ்நாளை நீடிப்பாயாக, அவரது வறுமையை அதிகாிப்பாயாக மேலும் அவரது கண்ணியத்தைக் குலைப்பாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

இதற்குப் பல ஆண்டுகள் கழித்து உஸாமாவிடம் அவரது நிலை எப்படியுள்ளது என்று வினவப்பட்டால்….

‘வயது முதிர்ந்த கிழவனாக அலுப்பு தட்டியவனாக சஅதின் பிரார்த்தனையால் பாதிக்கப்பட்டவனாக இருக்கிறேன்” என்று பதிலளிக்கும் நிலையில் இருந்தார். இச்சம்பவத்தை விவாிக்கும் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறும் போது, ‘நான் அவரை (உஸாமாவை) ஒருமுறை பார்த்தேன். வயோதிகத்தின் காரணமாக அவரது புருவங்கள், கண் இமையில் படும் அளவிற்குத் தொங்கியிருந்தது. இருப்பினும் தெருக்களில் இளம் பெண்களைக் கடந்து செல்லும் போது அவர்களை தொந்தரவு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார். நூல்: புகாாி, முஸ்லிம், அபூதாவூத்

Related Post