பகலவனின் பலதார மணம் பாவையர்க்குப் பாதகமா? -3

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல.

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல.

ரோஷன்

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு சமூதாயத்தை சரியச் செய்யக்கூடியதொன்றல்ல. மாறாக சமூதாய கட்டமபைப்பை அழகிய ஆளுமையினால் கட்டியெழுப்பச் செய்தது…இதன் ஆழ அறிவைஒருவன் தேடும் போது கண்டு கொள்வான் யதார்த்த நிலையை……!

(02)இஸ்லாமிய ஷரீஅத் சட்டதிட்டங்களோடு தொடர்புடைய காரணங்கள்.

அன்றைய அரேபியர்கள் கற்பனைக் கோட்பாடுகளிலும் பொருத்தமற்ற கொள்கைகளிலும் மூழ்கி அதிலே விடாப்பிடியாக இருந்தனர்.அவைகளில் ஒன்றுதான், தத்துப் பிள்ளையை தனது சொந்த பிள்ளையாகக் கருதும் வழக்கம்.

இஸ்லாத்தின் தோற்றத்தோடு இதுபோன்ற பல்வேறு கற்பனைக்; கோட்பாடுகளிலும் மாற்றம் வந்தது.அதனால்தான், தனது வளர்ப்புப் பிள்ளையான ஸைத் அவர்களை அவருடைய சொந்த தந்தையான ஹாரிஸ் என்பாருடைய பெயருடன் சேர்த்துதான் அழைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிட்டான். பின்னர் ஸைதுக்கும் அவருடைய மனைவிக்கும் ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக சேர்ந்து வாழ இயலாத நிலை ஏற்பட்டபோது, முஹம்மத் (ஸல்) அவர்கள் இருவருக்கும் விவாக விலக்கு செய்து வைத்தார்கள்.

பின்னர், விவாக விலக்கு செய்யப்பட்ட ஸைதின் மனைவியை மணந்தகொள்ளுமாறு இறைவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்குக் கட்டளையிட்டபோது, அண்ணலார் (ஸல்) அவர்கள் தயங்கினார்கள். எனினும், இறைவிருப்பம் வேறாக இருந்தது.தனக்கு பிறக்காத, தத்தெடுத்து வளர்த்த குழந்தை எந்த வகையிலும் தனக்கு சுயமாகப் பிறந்த குழந்தைக்கு ஈடாக முடியாத என்பதை விளக்க இறைக்கட்டளைப்படி முஹம்மத் (ஸல்) அவர்கள் இந்த திருமணத்தைப் பரிந்தார்கள். (பார்க்;க. திருக் குர்ஆன்  :37)

இதிலிருந்த இந்த திருமணம், அஞ்ஞானக்கால மூடப்பழக்கங்களுக்கு எதிரான ஒரு சாட்டையடியாக,அதனை ஒழிக்க, மக்களுக்குக் காட்டப்பட்ட வழிமுறையே அன்றி,விமர்சகர்கள் கூறுவதுபோல, இச்சை தீர்க்க நடந்த இங்கிதமில்லா இல்லற வேள்வி அல்ல!

 (03)சமூகவியல் காரணிகள்.

தன்னுடன் ஆரம்பகாலந்தொட்டே தோளொடு தோளாக இருந்து, இஸ்லாமிய வளர்ச்சிப் பணியில் அனைத்து வகைகளிலும் உற்ற துணையாக இருந்த அபூபக்கர் (ரலி) அவர்களுடனான தனது உறவை வலுப்படுத்தி பறைசாற்ற முயன்றார் முஹம்மத் (ஸல்) அவர்கள்! இதற்கு செயல்வடிவம் தரும் வகையில் அவரடைய மகளார் ஆயிஷா (ரலி) அவர்களை மணமடித்துக் கொண்டார்கள்!

அதன் பின்னர் உமர் 9ரலி0அவர்களுடனான தொடர்பை குறைஷிக் குலத்தாருடன் நெருக்கப்படுத்தி கவுரவப்படுத்தும் வகையில் அன்னாருரடைய மகளார் ஹஃபஸா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கணவனை இழந்நதவர்கள்!

அதேபோல், சத்தியநெறியை ஏற்ற பெண்ணொருத்தி, கணவனை இழந்து

அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டு, தனது கோத்திரத்தினரிடத்தில் மீளப் போனால், அசத்தியத்தில் இருக்கும் அவருடைய சமூகம் அவரை எந்த நிலைக்கு ஆட்படுத்தம் என்பது தெளிவு! சித்திரவதைக்கு உட்படுத்தப்படுவார் என்பது தெளிவு!அஆதனால்தான் இத்தகையதொரு நிர்க்கதியில் இருந்த அன்னனை ஸவ்தா(ரலி) அவர்களை மீட்டெடுக்கவும் இஸ்லாத்தில் அவருக்கிருந்த உறுதி,விருப்பம் என்பனவற்றிற்கு பரிசாகவும் மற்றும் அவருடைய கணவர் இஸ்லாத்தில் கொண்ட அசையா நம்பிக்கையை கவுரவப்படுத்தும் முகமாகவும் அன்னாரை மணந்துகொண்டார்கள் முஹம்மத் 9ஸல்) அவர்கள்!

கணவனை இழந்த பெண்களுக்கு சமூக அந்தஸ்து பெற்றுத் தந்து, அவர்தம் குழந்தைகளை சரியான பாதயில் வளர்த்தெடுப்பதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், கணவனை இழந்த பெண்டிரான ஸைனப் பின்த் ஹுஸைமா(ரலி) அவர்களை அன்னாருடைய 60-ஆவது வயதிலும்,ஹின்த் பின் அபி உமையா(ரலி) எனும் நான்கு குழந்தைகளின் தாயையும் மணமுடித்தார்கள்.

 (04)அரசியல் காரணிகள்.

இஸ்லாமிய அரசு மழலைப்பருவத்திலிருந்த வேளையில், அதன் பாதுகாப்புக்கும்,ஸ்திரத்தன்மைக்கும் ஏற்ற வகையிலான படைபலமோ.ஆயுதப்பலமோ அரம்பத்தில் கொண்டிருக்கவில்லை. ஆதலால், தனது அரசின் சரியான வளர்ச்சிக்கும். ஸ்திரத்தன்மைக்கும் வழிவகுக்கும் எந்தவொரு வழிவகையையும் ஆகுமான முறையில்

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு

முஹம்மத் (ஸல்) அவர்களின் பலதார மணவாழ்வு

மேற்கொள்ள முஹம்மத் (ஸல்) அவர்கள் பின்வாங்கவில்லை. அதில்  ஒன்றுதான், பகைமை பாராட்டும் கோத்திரத்தாருடன் நல்லுறவைப் பேண அவர்தம் கோத்pரப் பெண்ணணை மணமுடித்துக் கொண்டதும்!

பனூ முஸ்தலிக் கோத்திரத்தாருடனான பகைமையை முடிவுக்குக் கொண்டுவர,முஹம்மத் (ஸல்) அவர்கள் சிறைபிடிக்கப்பட்ட அக்கோத்திர தலைவனின் மனைவியருள் ஒருவரான ஜூவைரியா (ரலி) அவர்களை. அன்னாருடய பூரண சம்மமதத்துடன் மணமுடித்தக் கொண்டார்கள்.போர்க்கைதிகளுடன் அண்ணலாருடய இத்தகைய ச5க நடைமறை அக்கோத்திரத்தார் அனைவரையும் இஸ்லாமிய நிழலின் கீழ் கொண்ட வந்ததுடன். இஸ்லாமிய அரசின் நிலைத்தன்மைக்குக் கட்டியம் கூறுவதாயும் அமைந்தது.

தனது சிறிய தந்தையின் மனைவியாருடைய தங்கையான, வயது முதிர்ந்த, குறைஷி வம்ச ஹிலாலியா கோத்திர மங்கையான மைமூனா (ரலி) , ஸ ஃபிய்யா(ரலி),உம்மு ஹபீபா(ரலி) ஆகிய இருவரை மணமடித்ததும் இதனடிப்படையில்தான்!

கோத்திரங்களிற்கிடையே பல வகையான சச்சரவுகளும் அமைதியின்மையும் நிலவிய சமூக சூழ்நிலையில் பலதரப்பட்ட கோத்திர பெண்களுடன் ஒன்றாக குடும்ப வாழ்வு நடாத்தியதன் மூலம் நபி எனும் வகையில் நபி(ஸல்) முன்னுதாரணம் காட்டினார்கள்.அத்தோடு பலதரப்பட்ட கோத்திரங்களைச் சேர்ந்த பெண்களை ஒருபக்கச் சார்பற்று தனது மனைவியராக வைத்திருந்ததன் மூலம் சகோதரத்துவம் பற்றிய உணர்வை மனித உள்ளங்களில் பதிப்பதற்கு நபி(ஸல்) முயற்சித்தார்கள்.

எனவே சுருங்கக் கூறின், ஆகவே, மனிதகுலத்தின் ஈடிணையில்லா இந்த பகலவனின் பலதாரமண வாழ்வு சில விமர்சகர்களின் கருத்துப்படி காம இச்சையை தீர்த்துக் கொள்வதற்காக வேண்டி நடைபெற்ற கீழ்த்தரமான நடவடிக்கை அல்ல! மாறாக, உயர்ந்த இலட்சியங்களையும் படிப்பினைகளையும் முன்னிறுத்தி நடைபெற்ற ஆக்கபூர்வமான செயல்முறை என்பது இந்த நான்கு காரணங்களையும் ஆராய்ந்து படிக்கின்ற போது தெளிவாகின்றது.

 

Related Post