நபித்தோழர்கள் சீரிய வரலாறு! – 3 (2)

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

–  நூருத்தீன்

முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இருந்து, அவர்தம் செயல்முறைகளைக் கண்டு, அழகிய முறையில் தம் வாழ்வில் பின்பற்றி இஸ்லாத்தின் வடிவை செயல்படுத்திக் காட்டிய தோழர்கள் பலர்..!

நுஐம் பின் மஸ்ஊத் அல் அஷ்ஜஈ 

(نُعَيْمِ بْنِ مَسْعُودٍ الْأَشْجَعِيِّ)

மதீனாவிலிருந்து கிளம்பிய பனூ நதீர் கூட்டத்தில் பெரும்பகுதியினர் கைபருக்குப் புலம் பெயர, மற்றவர்கள் சிரியா சென்று விட்டனர். கைபர் சென்று குடியேறியவர்கள் ஒழுங்காய் அங்கேயே அமைதியாய் வாழ்ந்திருக்கலாம் – ம்ஹும்! கூடவே பிறந்த விபரீத புத்தி விடவில்லை.
மக்கத்துக் குரைஷிகள் முஸ்லிம்களுடனான முந்தைய போர்களின் வலியால் கோபத்துடன் ஒரு வாய்ப்புக்காகக் காத்திருந்த நிலையில், ஹுயை பின் அக்தப் (حيي بن أخطب‎) எனும்பனூநதீரின்முக்கியப்புள்ளி, மக்கா சென்று குரைஷித் தலைவர்களைச் சந்தித்தான். இந்த ஹுயை பின் அக்தபின் மகளான சஃபிய்யா பின்த் ஹுயை (ரலியல்லாஹு அன்ஹா) பின்னர் முஹம்மது நபியவர்களின் மனைவியானது தனிக் கதை. மக்கா சென்ற அவன் சந்திக்க வேண்டிய தலைவர்களைச் சந்தித்து, சரியான முறையில் கிளற, ஏற்கெனவே அனல் அடங்காமலிருந்த நெருப்பு, எளிதில் பற்றிக் கொண்டது.

“படை திரட்டி நீங்கள் மதீனா வந்தடையும்போது நாங்களும் படையுடன் கலந்து கொள்கிறோம். அந்த முஹம்மதையும் அவர் கூட்டத்தையும் ஒரு கை பார்த்து விடுவோம்” என்று பேசிக் கொள்ளப்பட்டது. சுபயோக சுபதினமாக ஒரு தேதி குறித்தார்கள். அபூஸுஃப்யான் தலைமையில் குரைஷிகள் படை தயாராக ஆரம்பித்தது.

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாய் வளர்ந்து வரும் முஸ்லிம்களை அழித்தொழிக்க இது பத்தாது. மேலும் கூட்டணி அமைத்துப் பெரும்படை திரட்ட வேண்டும் என்று நிச்சயம் அறிந்திருந்தார்கள் பனூ நதீர் கூட்டத்தார். எனவே அங்கிருந்து அப்படியே நஜ்து சென்றார்கள். அங்குள்ள கத்தஃபான் கோத்திரத்தைப் பேசி வளைத்தார்கள். வளைப்பதற்கு நல்ல விலை பேசப்பட்டது, விளைச்சலில் பாதி கத்தஃபானுக்கு அன்பளிப்பு என்று. அதாவது தங்கள் அறுவடையில் சரிபாதி என்று வாக்களிக்கப்பட்டது. இது நல்ல திட்டமாக இருக்கிறதே என்று ஏற்றுக்கொண்டு உயைனா இப்னு ஹஸ்ன் தலைமையில் கத்தஃபானின் படை தயாரானது. அதன் முன்னணிப் படை வீரராக நியமிக்கப் பெற்றவர் நுஐம் பின் மஸ்ஊத்.

இது தவிர துலைஹா அஸதி தலைமையில் பனீ அஸத் சேர்ந்து கொண்டனர். பனூ ஸுலைம், பனூ முர்ரா, பனூ ஷுஜா போன்ற இதர கோத்திரத்தினரும் ஏதோ திருவிழா வேடிக்கை பார்க்கப் போவதுபோல் சேர்ந்து கொண்டனர்.

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அது பெரிய படை. அந்தக் காலகட்டத்தைக் கருத்தில் கொண்டு பார்த்தால் அது வலுவான பெரிய படை.

சற்று மூச்சு வாங்கிக் கொண்டு நிகழ்காலத்தைப் பார்த்தால், இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் ஒழித்துக் கட்ட கூட்டணிப்படை அமைப்பது என்பது ஆயிரத்து நானூற்று சொச்சம் வருடங்களாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது என்ற நிதர்சனம் புரியும். ஏதும் மாற்றமில்லை. அன்று பனூ நதீர், இன்று வல்லரசு நாட்டான். அவ்வளவே!

செய்தி மதீனா வந்தடைந்தது. முஹம்மது நபி (ஸல்) உடனே தம் தோழர்களுடன் ஆலோசனை செய்தார்கள். முஸ்லிம்கள் தரப்பில் ஏறக்குறைய மூவாயிரம் படை வீரர்கள் தேறினர். எதிரியின் வலுவுடன் ஒப்பிட்டால் மூன்றில் ஒரு பங்குதான். காட்டுத்தனமாய் ஒரு முடிவுடன் கூட்டணிப் படை முன்னேறி வருகிறது. என்ன செய்யலாம் எனப் பல திட்டங்கள் விவாதிக்கப்பட்டன. ஸல்மான் அல் ஃபாரிஸி (ரலியல்லாஹு அன்ஹு) அவர்கள் எடுத்து வைத்த ஒரு யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பாரசீகத்திலிருந்து வந்தவர் அவர். அரபு நாட்டுப் போர் வீரர்க்ளுக்கு அறிமுகமாகி இல்லாத புதிய தற்காப்பு முறை ஒன்று தெரிவித்தார்.

அகழி!

அனைவருக்கும் அது பிடித்துப்போக, இராப்பகலாக வேலை நடக்க ஆரம்பித்து அகழி தயாரானது.

முஸ்லிம்கள் அகழி வெட்டிவிட்டுக் காத்திருந்தனர். கூட்டணிப் படை மதீனாவை நெருங்கி விட்டிருந்தது. அந்த நேரத்தில் பனூ நதீர் கூட்டத்தார் மற்றொரு சதித் திட்டம் தீட்டினர். மதீனாவில் மிஞ்சியிருந்த பனூ குரைளாவினர், ஒப்பந்தத்திற்குக் கட்டுப்பட்டு முஸ்லிம்களுடன் இணக்கமாக இருந்து வந்தார்களல்லவா? அவர்களைச் சென்று சந்தித்து நோண்ட ஆரம்பித்தார்கள். “நீங்களும் வந்து கூட்டணியில் இணைந்து கொள்ளுங்கள்” என்று. மற்றப் படைகளாவது வெளியிலிருந்து அணிதிரண்டு மதீனா வருகின்றன. இவர்கள் உள்ளுக்குள்ளேயே இருக்கிறார்கள். போர் என்று அவர்களும் குதித்தால், முஸ்லிம்களின் கதி? அதற்குத்தான் சமயோசிதப் பிரயத்தனம்.

“ம்ம்ம், யோசனை நன்றாகத்தான் இருக்கிறது என்றாலும்…” என்று மிகவும் யோசித்தார்கள், பயந்தார்கள் பனூ குரைளாவினர். முஹம்மதை ஒழித்துக் கட்டினால் தேவலை என்ற பேரவா அவர்களின் உள்ளுக்குள்ளும் பலமாய் இருந்ததுதான். “நாங்கள் விரும்பி நிறைவேற்ற நினைக்கும் ஒரு காரியத்திற்கு எங்களையும் சேர்ந்து கொள்ளச் சொல்கிறீர்கள். ஆனால் முஹம்மதுக்கும் எங்களுக்கும் இடையில் ஓர் உடன்படிக்கை இருப்பது உங்களுக்குத் தெரியும். அமைதியும் நிம்மதியும் மதீனாவில் எங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அவருடன் சமாதானம் மீறக் கூடாது என்று அது கூறுகிறது. அந்த உடன்படிக்கை இன்னமும் அமலில்தான் உள்ளது. நாங்கள் உங்களுடன் சேர்ந்து கொள்ளப்போய், முஹம்மத் இந்தப் போரில் வென்று விட்டால் அவரின் தண்டனை மிகவும் கடுமையானதாக இருக்கும். மேலும் சூழ்ச்சிக்குப் பலனாய் நாங்கள் நாடு துறக்கும் படியாகிவிடும்” என்றெல்லாம் கவலை தெரிவித்தனர்.

பனூ நதீர் சளைக்கவில்லை. வரும் படையினரின் பலம் எடுத்துரைத்தார்கள். முஹம்மத் இம்முறை எப்படியும் தோல்வியடைவது உறுதி என்று தர்க்கம் விவரித்தார்கள். முழுசாய் இந்தப் பிரச்சனை ஒரு முற்றுப் பெற்றுவிடும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நன்றாக யோசித்தார்கள் பனூ குரைளா. இறுதியில் அம்மி நகர்ந்தது.

உடன்படிக்கையைக் கிழித்துக் காற்றில் பறக்கவிட்டு, “நீங்கள் முன்

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

காலாட்படை, குதிரைப்படை என கூட்டணிப் படையினர் பத்தாயிரம்வரை திரண்டு விட்டதாக வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

னேறி வாருங்கள், இங்குப் பின்புறத்திலிருந்து நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்று தெரிவித்து விட்டார்கள்.

அது ஒரு பேரிடி! பாக்கு வெட்டியில் சிக்கிய பாக்கு என்றால் இன்றைய தலைமுறைக்கு எவ்வளவு புரியும் எனத் தெரியவில்லை, ஆனால் “சான்ட்விச்” தெரியும். அந்த நிலையாகிப் போனது முஸ்லிம்களின் நிலை.

கூட்டணிப் படையினர் மதீனாவை அடைந்து “ஆ”வென்று வாய் பிளந்து கிடந்த அகழ்நிலத்தைப் பார்த்து “ஹா” வென்று வாய் பிளந்தார்கள். அந்தத் தந்திரம் புதுசு. அதற்குமுன் அவர்கள் அறியாதது அது. பாலம் கட்டியோ, தாவியோ கடக்க முடியாது. அகழிக்கு அந்தப்புறம் முஸ்லிம் படை. சுதாரித்துக் கொண்டு, “பரவாயில்லை, காத்திருப்போம்” என்று அகழிக்கு இந்தப்புறம் தங்கிவிட்டார்கள். முற்றுகை தொடங்கப் பட்டது. வெளியிலிருந்து எந்த உணவோ, பண்டமோ, உதவியோ மதீனாவிற்குள் செல்லமுடியாமல் பாதையடைத்து விட்டார்கள்.

இந்தக் கடுமையான சூழலில்தான் “முனாஃபிக்குகள்” எனும் நயவஞ்சகர்கள் சுயநிறம் காண்பிக்க ஆரம்பித்தார்கள். இஸ்லாம், அல்லாஹ், நபி என்றெல்லாம் அவர்கள் போருக்கு வரவில்லை. வேறு வழியில்லை; வந்திருந்தார்கள்.இப்பொழுது சூழ்நிலை முஸ்லிம்களுக்குத் தோல்வி உறுதி என்று அறுதியிட்டு சொல்கிறது. என்ன செய்வது?

அகழி வெட்டும்போது முஹம்மது நபி (ஸல்) சில எதிர்கால நிகழ்வுகள் பற்றிச் சொல்லியிருந்தார்கள் – சீஸர், குஸ்ரோவின் (ரோம மற்றும் பாரசீக சாம்ராஜ்ஜிய) செல்வமெல்லாம் முஸ்லிம்களின் வசமாகும் என்பது சாராம்சம். அது ஞாபகம் வந்து முனாஃபிக்குகளுக்கு, அடக்க மாட்டாத சிரிப்பு எழ,

“சீஸர் மற்றும் குஸ்ரோவின் செல்வமெல்லாம் நமக்கு கிடைக்கும் என்று முஹம்மத் சொல்கிறார். ஆனால் இங்கு பார் நம் நிலைமையை. ஒருவராவது நிம்மதியாய் வெளியே சென்று மல-ஜலம் கழித்து விட்டு, பத்திரமாய் திரும்ப முடியாத கேவல நிலை.”

மனுஷனோட வயிற்று உபாதையையே சரிசெய்து கொள்ள முடியவில்லை, இதில் செல்வமாம், கிரீடமாம்! இதெல்லாம் சரிப்பட்டு வராது என்று கிளம்பி விட்டார்கள்.

“என் பெண்டாட்டி தனியா இருக்கா, புள்ளைக் குட்டிகளெல்லாம் தனியாகக் கிடக்கின்றனர். வீட்டில் ஆண்துணை இல்லை. பின்னாலிருந்து பனூ குரைளாவினர் புகுந்து விடுவார்கள் போலிருக்கிறது. முதலில் போய் வீட்டைப் பார்க்கிறோம்” என்று கொஞ்சம் கொஞ்சமாய், சென்று விட்டார்கள்.

மீதமிருந்தவர்கள் நபியும், உயிர் கொடுக்கும் தோழர்களும் மட்டும். கூடவே அவர்களின் அசைக்கவியலா இறை நம்பிக்கையும். நிலைமை கடுமையடைந்து கொண்டே சென்றது. முஹம்மது நபி (ஸல்) இறைவனிடம் ஆழ்ந்து பிரார்த்திக்க ஆரம்பித்தார்கள்.

“யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன். யா அல்லாஹ், நீ வாக்குறுதி அளித்தாயே வெற்றி, அதை வழங்கும்படி மன்றாடிக் கேட்கிறேன்”

முஸ்லிம்களுக்குப் பேரிடி இறங்கியது என்று பார்த்தோமல்லவா? இப்பொழுது புயல் உருவானது. ஒன்றல்ல, இரண்டு. சற்று வித்தியாசமாய் திசை மாறி அடித்த புயல்கள் அவை.

அதில் முதலாவது நுஐம் மனதைத் தாக்கியது. கூட்டணிப்படை வீரர்களுடன் வெட்ட வெளியில் படுத்திருந்தவர் அன்றிரவு தூங்க இயலாமல் புரண்டு கொண்டிருந்தார். மல்லாந்து படுத்து நட்சத்திரங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவருக்கு மனதிற்குள் குழப்பங்கள். “அட நுஐம்! நீ நஜ்து நாட்டினன். கண்காணாத தூரத்தில் இருக்கிறது உனது ஊர். அங்கிருந்து எதற்கு மெனக்கெட்டு இந்த முஹம்மதையும் அவருடன் இருப்பவர்களையும் ஒழித்துக் கட்டக் கிளம்பி வந்திருக்கிறாய்? ஏதோ பெரிய சாதனை படைக்கவா? அல்லது உனது வீட்டிற்கோ, குலத்திற்கோ குந்தகம் செய்ததற்குப் பழி வாங்கவா? காரணம் என்று  உருப்படியாக ஒன்றுமில்லை. ஏதோ சும்மா பொழுது போகாமல் சண்டை போட வந்திருக்கிறாய். உனக்கென்று ஒரு புத்தி இருக்கிறது. அது நல்ல புத்தி. மற்றவர்களும் உன்னைப் புத்திசாலி என்றுதான் சொல்கிறார்கள். அப்படிப் புத்திசாலியான நீ, எந்த முகாந்திரமும் இல்லாமல் அவர்களைக் கொல்லவோ, அல்லது நீ கொல்லப்பட்டு இறந்து போகவோ என்ன காரணம் இருக்கிறது? இது கேவலம் நுஐம்!

இந்த முஹம்மது நபி என்ன சொல்கிறார்? தன்னைப் பின்பற்றும் மக்களை ‘நீதியுடன் நடந்து கொள்ளுங்கள், நல்லன செய்யுங்கள், உறவினர்களுக்கெல்லாம் உதவுங்கள்’ என்கிறார். அவர் பேச்சைக் கேட்டு அவர்களும் அந்த உண்மையின்படி நடந்து கொள்கிறார்கள். அப்படிப்பட்ட இவர்களையெல்லாம் கொல்லவா வாளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டாய்? அவர்களின் உடல்களில் செருகவா ஈட்டியை ஏந்திக் கொண்டு திரிகிறாய்?”

அவருடைய மனசாட்சி அநியாயத்திற்கு அவரிடம் வாதாடியது. புயல் ஓய்ந்தது. மனதில் தெளிவு பிறந்தது. இருட்டில் நழுவினார் நுஐம் பின் மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு.

*****

“நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் அல்லாஹ்வின் தூதரே! ஆனால் என் மக்களுக்கு அது இன்னும் தெரியாது. சொல்லுங்கள், நான் என்ன செய்ய வேண்டும்?”

அவரை உற்று நோக்கிய முஹம்மது நபி (ஸல்) கூறினார்கள்: “நீ இப்பொழுது இந்தப் பக்கம் வந்தால் எங்கள் எண்ணிக்கையில் ஒன்று அதிகரிக்கும்; வேண்டாம், உன் மக்களிடத்துத் திரும்பிச் செல். உன் மாற்றமும் நம் உறவும் தெரிய வேண்டாம். நிச்சயமாகப் போர் என்பது ஒரு தந்திரமே”

முஹம்மது நபியின் கடைசி வாக்கியத்தில் நுஐமிற்குப் போதுமான போர் உத்தரவுகள் கிடைத்து விட்டன.

“அப்படியே ஆகட்டும் அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் நாடினால் தங்களை எது மகிழ்வூட்டுமோ அதனைக் காணப் பெறுவீர்கள்.”

மனம் மாறிய நொடியிலேயே முழு முற்றும் சரணடையும் சுவாதீனம் இருந்தது அவருக்கு. அவருக்கென்று மட்டுமல்ல அனைத்துத் தோழர்களுக்கும். வரலாறு பகரும் விசித்திரம் அது. ரலியல்லாஹு அன்ஹும்.

“நான் ஒற்றை ஆள் என்ன செய்ய முடியும்?” என்ற பச்சாதாபமெல்லாம் அவர்களுக்கு இல்லை. மாறாக அவர்கள் தனிப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு படையளவு வலுவுடன் திகழ்ந்தார்கள். இஸ்லாத்தை வாழ்ந்தார்கள், சாதித்துக் காட்டினார்கள். பின்னர் வல்லரசுகளெல்லாம் சிற்றெறும்பாகிய கதையை நமக்கு வரலாறு வாய் பிளந்து விவரிக்க விட்டுச் சென்றார்கள்.

தன் கூடாரம் திரும்பிய நுஐம் உடனே கத்தியை ஓர் ஓரமாக வைத்துவிட்டு, புத்தியைத் தீட்டினார். நேரத்தை வீணாக்கவில்லை. உல்லாசத்திற்கு ஊற்றிக் கொடுத்துக் கூட்டாளியாகிப் போயிருந்த பனூ குரைளாவினரிடம் உடனே சென்றார்.

“இதோ பாருங்கள். எனக்கு உங்கள்மேல் தனிப்பட்ட முறையிலுள்ள அன்பை அறிவீர்கள்தானே?” என்றார்.

“நிச்சயமாக”

“அதனால் உண்மையான ஒரு விஷயம் சொல்கிறேன்”

“என்ன விஷயம் சொல்லு”

“இந்தக் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் இந்தப் போரில் அவர்களின் சுயநலம்தான் உள்ளது. உங்களின் நலன் அவர்களுக்கு ஒரு முக்கிய விஷயமே இல்லை”

“எப்படி? என்ன சொல்ல வருகிறாய்?”

நிதானமாகத் தெளிவாகச் சொன்னார். “இதோ பாருங்கள். இது உங்கள் ஊர். இங்குதான் உங்கள் சொத்து, பெண்டாட்டி, பிள்ளைக் குட்டிகள் அனைத்தும். ஏதாவது ஒன்று விபரீதமாக முடிந்தால் எல்லாவற்றையும் விட்டு விட்டோ, எடுத்துக் கொண்டோ, இழுத்துக் கொண்டோ வேறு ஊருக்குத் தப்பிச் செல்வது என்பது உங்களால் முடியாத காரியம். ஆனால், அதேநேரத்தில் குரைஷிகளுக்கும் கத்தஃபான்களுக்கும் அவர்கள் நிலம், சொத்து, பெண்டாட்டி, பிள்ளைகள் அனைவரும் பத்திரமாய் அவரவர் ஊர்களில் இருக்கிறார்கள். முட்டிப்  பார்க்கலாமே என்று முஹம்மதிடம் போர் புரியக் கிளம்பி வந்து விட்டார்கள். அதோடு நீங்கள் அவருடன் போட்டிருந்த உடன்படிக்கையையும் தூக்கி எறிய வைத்துவிட்டார்கள். நீங்களும் அப்பாவியாய் ஒத்துக் கொண்டீர்கள். போரில் கூட்டணிப் படையினர் வென்று விட்டால் கைப்பற்றுகிற அத்துணைப் பொருட்களையும் அவர்களே எடுத்துக் கொண்டு பங்கு போட்டுக் கொள்வார்கள். உங்களுக்கு ஏதும் கிடைக்கப் போவதில்லை. ஆனால் தப்பித் தவறி அவர்கள் தோற்றுவிட்டால், எனக்கென்ன போச்சு என்று ஊரைப் பார்க்க ஓடிவிடுவார்கள். மாட்டப் போவது யார்? நீங்கள்தான். அப்பொழுது முஸ்லிம்களின் அத்துணைக் கோபமும் உங்கள் மேல்தான் இறங்கும். அவர்களை எதிர்க்கும் சக்தியெல்லாம் உங்களுக்கு இல்லை என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும்.”

சரியான மிரட்டல், தெளிவான வார்த்தைகளில் வந்து விழுந்தது. பதற்றத்தைச் சரியாகவே அவை தோற்றுவித்தன. அவர் சொன்னதன் சாத்தியம் நினைத்துப் பார்க்கவே கதி கலங்கியது பனூ குரைளா கூட்டத்தாருக்கு.

“நீ சரியாகத்தான் சொல்கிறாய். நாங்கள் இப்பொழுது என்ன செய்வது?”

“என்னுடைய ஆலோசனை, நீங்கள் கூட்டணிப் படையினரிடம் முக்கியஸ்தர்கள் சிலரைப் பிணையாளிகளாகப் பெற வேண்டும். அதுவரை அவர்களுடன் நீங்கள் போரில் இணையக் கூடாது. அப்படி அவர்கள் பிணையாளிகளாகச் சிலரைக் கொடுத்தால் நீங்கள் நம்பிச் சண்டையிடலாம். முஹம்மதா நீங்களா என்று ஒரு கை பார்த்து விடலாம். அப்பொழுதுதான் கூட்டணிப் படையினரும் உங்களை நிர்க்கதியாக விட்டு விட்டு ஓடாமல் முழுமூச்சுடன் போரிடுவார்கள்”

“பேஷ் பேஷ். நன்று சொன்னாய் நுஐம்” என்று ஆரவாரித்து மகிழ்ந்தனர் பனூ குரைளாவினர்.

முதல் தந்திரம் வேலை செய்ய ஆரம்பித்தவுடன் அடுத்து நேராக அபூஸுஃப்யானையும் மற்றும் சில குரைஷித் தலைவர்களையும் சென்று சந்தித்தார் நுஐம். “குரைஷிகளே! உங்கள் மீது எனது அபிமானமும் முஹம்மத் மீது நான் கொண்டுள்ள வெறுப்பும் நீங்களெல்லாம் நன்கு அறிந்த ஒன்று. நான் சில செய்திகள் கேள்விப்பட்டேன். தங்களுக்கெல்லாம் தெரிவிப்பது எனது கடமை எனத் தோன்றியது. இதனைத் தாங்கள் கவனமாகக் கேட்க வேண்டும். ஆனால் நான் தெரிவித்ததாக யாரிடமும் சொல்லிவிடக் கூடாது.”

“என்ன அது? விரைந்து சொல்” என்றனர் குரைஷிகள்.

Related Post