அன்னை கதீஜா..! -2

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள்.

– எம். வை. மஸிய்யா 

வர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களும் புரிந்தார்களோ அவர்கள்தாம் திண்ணமாக, படைப்பினங்களில் மிகவும் மேன்மை வாய்ந்தவர்கள். அவர்களின் கூலி அவர்களுடைய அதிபதியிடம் நிலையாகத் தங்கும் சுவனங்களாகும். அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கி வாழ்வார்கள். அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தியுற்றான். அவர்களும் அவனைக் குறித்து திருப்தியுற்றார்கள். இவை அனைத்தும் தம் இறைவனை அஞ்சக்கூடிய மனிதருக்குரியவையாகும்.

திருமணம்

கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர் அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா (ரலி) அவர்கள் விதவையாகக் காணப்பட்டார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள். மக்கா மாநகரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைவரினதும் ஒட்டகங்களின் சுமைகளைவிட கதீஜா (ரலி) அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு, அவ்வளவு பொருட்களுக்கும் உரிமையாளராக அவர்கள் காணப்பட்டார்கள்.

நபியவர்கள் வியாபாரத்தில் மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதனால் மக்கள் அவர் மேல் உயிரையே வைத்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன.

அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள். நபி (ஸல்) அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி (ஸல்) அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா (ரலி)அவர்கள். இதனால், நபி (ஸல்) அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா (ரலி)அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது; நபி (ஸல்) அவர்களின் வயது இருபத்தைந்தாக இருந்தது.

பிள்ளைகள்

நபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா (ரலி) அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூ ஹாலா மூலமாக ஹிந்த், ஹாலா ஆகிய பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார். அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி (ரஹ்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் பிள்ளைகள் பற்றி

காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா (ரலி) அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர். இவர்களில் ருகையா (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் (ரலி) அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி (ஸல்) அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள். எனினும் பாத்திமா (ரலி) அவர்கள் மாத்திரம் நபி (ஸல்) அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள்.

அன்னை கதீஜா (ரலி) அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள்.

கதீஜா (ரலி) அவர்களின் வயது 55 ஆகவும், நபி (ஸல்) அவர்களின் வயது இருந்த வேளை அது. நபி (ஸல்) அவர்கள், சீர் கெட்டு, வழி தவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சமுதாயத்தைச் சீர் செய்வதெப்படி, அவர்களை ஒளியின்பால் இட்டுச் செல்வதெப்படி என்றெல்லாம் பலவாறு சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அவ்வேளை நபி (ஸல்) அவர்களது உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக் கொடுத்தது. எனவே, இறைவனை வணங்கி வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இவ்வாறு, நபி (ஸல்) அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா (ரலி)அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள். குகை, ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது. இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா (ரலி)அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் ஹிராக் குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் முன் தோன்றி‘இக்ரஃ’ (ஓதுவீராக!) என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “எனக்கு ஓதத் தெரியாது”என்றனர். பின்னர் நபி (ஸல்) அவர்களை இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி மீண்டும் நபி (ஸல்) அவர்களைக் கட்டித் தழுவிவிட்டு 96 ஆம் அத்தியாயமாகிய “அல்-அலக்” இன் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி (ஸல்) அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் (அலை) அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி (ஸல்) அவர்கள் கதீஜா (ரலி)அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.

கதீஜா (ரலி) அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி (ஸல்) அவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள்; பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி) அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு:“அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்)சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

அச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவனை அன்போடு ஆறுதலளித்து அரவணைத்த விதத்தைப் பெண்கள் அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

¨ தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்கு என்ன நடந்தது என்று பதறியடித்துக்கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து அவரைத் திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரை நபி (ஸல்) அவர்களைப் போர்த்திவிட்டமை.

¨ தமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்று கூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்கு எடுத்துக்காட்டாகும்.

¨ தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது நபி(ஸல்) அவர்களிடம் காணப்பட்ட அருங் குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக் காட்டிய விதமானது, அன்னை கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் தெளிவுபடுத்துகின்றது.

¨ கதீஜா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான்’ என்று ஆணித்தரமாகக் கூறியமை அன்னாரது இறை நம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.

¨ இந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம் கணவரை வேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றமை கதீஜா (ரலி) அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளமை நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப் பக்குவமும் அறிவும் கதீஜா (ரலி) அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது.

 

 

 

 

Related Post