அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 6

– மவ்லானா ஸஃபீயுர் ரஹ்மான்

– தமிழில் : மு.அ. அப்துல் முஸவ்விர்

அண்ணலார் (ஸல்) அழகிய வரலாறு..! – 6

ண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரையும் அன்னாரின் தூதுத்துவத்துக்கு முன்பான வாழ்வும்!

பார் போற்றும்அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் பரம்பரை

 

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய பொன் மொழிகளுள்

அண்ணல் நபி (ஸல்) அவர்களின் அழகிய                 பொன் மொழிகள்

அப்துல் முத்தலிப் அவர்களின் வாழ்வில் இரு முக்கிய நிகழ்வுகள்!

1. ஜம்ஜம் – கிணற்றை தோண்டுதல். ஒரு முறை, குறிப்பிட்டதொரு இடத்தில் ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு, அப்துல் முத்தலிப் அவர்களுக்கு கனவின் மூலம் கட்டளை கிடைத்தது.அவரும் அவ்வாறே செய்ய, அதன் பின்னர், புனித யாத்திரிகர்களுக்கு ஜம்ஜம் நீரை வழங்கும் வழக்கமும் உண்டானது.

2. யானை நிகழ்வு: எமன் நாட்டில் இருந்த அப்ரஹா அல்-ஹபஷி எனும் அபீசீனிய (எத்தியோப்பிய) ஆளுநர் தொடர்பான இந்த பிரபல்ய வரலாற்று நிகழ்வு நடந்தது. கஅபா-விற்கு அரபியர்கள் பெருந்திரளாக புனிதப் பயணம் மேற்கொள்வதைக் கண்ட அவன், அவர்களின் பயணத்தை தனது நாட்டுக்கு திசைதிருப்பும் நோக்கத்துடன், எமன் நாட்டின் ஸனா-வில் ஒரு மாபெரும் தேவாலயத்தை எழுப்பினான். கினானா குலத்தைச் சேர்ந்த ஒருவன் அவனுடைய இந்த சூழ்ச்சியை அறிந்துகொண்டான்.எனவே, ஒரு நாள் இரவில் தேவாலயத்தினுள் நுழைந்து, அதன் முன்பக்க சுவரை கொண்டு சேதப்படுத்திவிட்டான். இதனைக் கேட்ட அப்ரஹா கடுஞ்சினம் கொண்ட வெகுண்டெழுந்தான். அறுபதாயிரம் வீரர்கள் கொண்ட மாபெரும் படையுடன், கஅபாவை இடிக்கப் புறப்பட்டான். அவனுடைய படையில் ஒன்பது அல்லது பதிமூன்று யானைகளும் இருந்தன.தனக்காக ஒரு பெரிய யானையை தேர்ந்தெடுத்துக் கொண்டான். முஸ்தலிஃபாவிற்கும் மினாவுக்கும் இடைப்பட்ட ஒரு பள்ளத்தாக்கை அடையும் வரை தொடர்ந்து பயணித்தது அவன் படை. ஆதன் பின்னர், அவனது யானை மேலும் நகர்ந்து செல்லாமல், மண்டியிட்டு அமர்ந்து முரண்டு பிடித்தது. அதனை கிழக்கு, வடக்கு அல்லது தெற்குப் பக்கமாக நகர்த்தும்போதெல்லாம் உடனே நகர ஆரம்பித்தது. ஆனால், மேற்கு திசையில் கஅபா-வை நோக்கி நகரச் செய்ய முயன்றால், மேலும் முன்னேறிச் செல்லாது மண்டியிட்டு அமரந்து கொண்டது. அதேவேளை, அல்லாஹ், அப்படையினரை நோக்கி பறவைக் கூட்டத்தை அனுப்பினான். அவை சுட்ட களிமன் கற்களை அந்தப் படையினர் மீது எறிந்தன. இந்த தாக்குதலால் அப்படை, அறுத்தெறியப்பட்ட புற்களாக ஆகியது. அந்தப் பறவைகள், உருவத்தில் குருவி மற்றும் சிட்டுக்குருவி போன்று இருந்தன. ஒவ்வொன்றும் மும்மூன்று கற்களை சுமந்து வந்தன. ஒன்று அவற்றின் அலகுகளிலும், மற்ற இரண்டும் அவற்றின் இறக்கைகளிலும் சுமந்து வந்தன. அந்த கற்கள் அப்ரஹா-வின் படைவீரர்களின் முதுகெலும்புகளைப் பதம் பார்த்தது. அவர்கள் கொல்லப்பட்டனர். ஒரு மாபெரும் எண்ணிக்கையிலான படையினர் இவ்வாறு கொல்லப்பட, மற்றவர்களோ, அங்கும் இங்கும் தப்பியோடத் தலைப்பட்டு, ஒவ்வொரு இடத்திலும் கொல்லப்பட்டனர். சுயம் அப்ரஹாவே. தனது விரல்நுனிகளில் காயப்படுத்தப்பட்டு, நோய்வாய்ப்பட்டான். ஆவன் ஸனா-வை அடைந்தபோது, பீதியடைந்த நிலைக்குத் தள்ளப்பட்டு, மிக விரைவிலேயே மரணத்தைத் தழுவினான். இந்த யானை நிகழ்வு, முஹர்ரம் மாதத்தில், அண்ணலார் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு, ஐம்பது அல்லது ஐம்பத்தைந்த நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்தது.

3. அப்துல்லாஹ்: அண்ணலார் (ஸல்) அவர்களின் தந்தையாகிய இவர், அப்துல் முத்தலிப் அவர்களின் புதல்வர்களிலேயே மிகவும் சிறந்தவராக விளங்கியவர். இவருக்கு ‘தாபிஹ்’ (தியாகி) எனும் சிறப்புப் பெயரும் உண்டு. ஜம்ஜம் கிணற்றைத் தோண்டுமாறு கனவின் மூலம் தனக்குக் கிடைத்த கட்டளையை நிறைவேற்ற, அப்துல் முத்தலிப் முயன்றார். அதனை மீண்டும் கண்டுபிடித்து நிர்மாணிப்பதில் பிற குறைஷியரும் உரிமை கொண்டாட முயற்சித்தனர். இதனால், இப்பிரச்னையிலிருந்து குறைஷியர் விலகி, ஜம்ஜம் கிணற்றைத் தான் மீண்டும் தோண்ட அனுமதித்தால், தனது பத்து புதல்வர்களில் ஒருவரை பலியிடுவதாக நேர்ச்சித்துக் கொண்டார்.இறுதியில், அப்துல் முத்தலிப், அதனைக் கண்டெடுத்து வெற்றி கண்டார்.பின்னர், தனது இரகசிய நேர்ச்சையை தன் புதல்வர்களிடம் கூற, அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டனர். புதல்வர்களில் ஒருவரைப் பலியிட, அப்துல் முத்தலிப் சீட்டு குலுக்கியபோது.., அப்துல்லாஹ் அவர்களின் பெயர் வந்தது.ஆனால், குறைஷியரும், அவருடைய தந்தையரும், சகோதரர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அதற்குப் பகரமாக, நூறு ஒட்டகங்களைப் பலியிடுவது என தீர்மானிக்கப்பட்டது.
வஹாப் என்பாரது புதல்வியான ஆமீனா எனும் நல்லாளை, அப்துல் முத்தலிப் தனது மகன் அப்துல்லாஹ்-வுக்கு வாழ்க்கைத் துணைவியாகத் தேர்ந்தெடுத்தார். பனீ ஜஹ்ரா கோத்pரத்தின் தலைவரான வஹாப் மிகவும் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரியவராகத் திகழ்ந்தார். மணமக்கள், மக்காவில் மணமுடிக்கப்பட்ட பின்னர், அப்துல்லாஹ்-வை, பேரீத்தம்பழ வணிகம் நிமித்தமாக மதீனா நகருக்கு அனுப்பி வைத்தார் அப்துல் முத்தலிப். அங்கு அவருடைய மரணம் நிகழந்தது. இன்னும் சில பதிவுகளில், அப்துல்லாஹ் அவர்கள் வியாபாரம் நிமித்தமாக. சுpரியா சென்று திரும்பும் வழியில், மதீனா-வில் மரணித்ததாக வருகின்றது. அப்போது அவருக்கு வயது இருபத்தைந்து மட்டுமே! பெரும்பாலான வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, அவருடைய மரணம், அண்ணலார் (ஸல்) அவர்களின் பிறப்புக்கு இரண்ட மாதங்கள் முன்பாக நிகழ்ந்தது. தனது மகனுக்காக அப்துல்லாஹ் அவர்கள் விட்டுச் சென்றது எவை தெரியுமா..? மிக சொற்பமான அளவு செல்வமே! – ஐந்து ஒட்டகங்கள், சிறிய எண்ணிக்கையிலான ஆடுகள், ஒரு பணிப்பெண், பரகா-உம்மு அய்மன் என்று வழங்கப்பட்ட இவர், பின்னாளில் அண்ணலார் (ஸல்) அவர்களுக்குப் பணிவிடை செய்யும் பொறுப்பை மனமுவந்து செய்தார்.
அன்னாருடைய பிறப்பு
இறைத்தூதர்களின் தலைவரான முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்கா மாநகரின், பனீ ஹாஷிம் வீதியின் இல்லத்தில், ஒரு திங்கட்கிழமை காலையில், அரபிய மாதமான ரபீ-அல்-அவ்வல் மாதம், ஒன்பதாம் நாள், (அதற்குரிய ஆங்கில நாட்காட்டியான) கி.பி. 571, ஏப்ரல், இருபத்திரண்டாம் நாள், யானை நிகழ்வு நடந்தேறிய அதே வருடம் பிறந்தார்கள். அன்னாருடைய தாயார் அவர்கள், தான் கருவுற்றிருந்த வேளை, தனது (வயிற்று) உடற்பகுதியிலிருந்து ஒளியொன்று புறப்பட்டு, சிரிய தேசத்தின் அரண்மனை வரை சென்று ஒளிரச் செய்வது போன்ற கனவொன்றைக் கண்டார்.
அண்ணலார் (ஸல்) அவர்களின் தாயார் உடனே, அன்னாருடைய இந்த மகிழ்ச்சிகரமான பிறப்புச் செய்தியை, அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களுக்கு சொல்லி அனுப்பினார்கள். சந்தோஷப் பூரிப்புடன் வந்த அவர், அன்னாரை தன் கரங்களில் ஏந்தி, புனித கஅபா-வுக்கு எடுத்துச் சென்று, அல்லாஹ்வுக்கு நன்றி கூறி பிரார்த்தித்தார். அப்துல் முத்தலிப் அக்குழந்தைக்கு முஹம்மத் என்று பெயரிட்டார். ஆப்பெயர் அப்பொழுது. அரபியரிடத்திலே பழக்கத்தில் இருந்த பரவலான ஒரு பெயராக இருக்கவில்லை. ஆரபியர்களின் வழக்கப்படி, குழந்தை பிறந்த ஏழாவது தினத்தில் அவருக்கு விருத்தசோனம் செய்தார் அப்துல் முத்தலிப்.
அவருடைய அன்னைக்குப் பின்னர், முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு முதன் முதலில் பாலூட்டியவர், அவருடைய சிறிய தந்தையான அபூ லஹபின் தணைவி, துவைய்பா!
குழந்தைப்பருவம்
நகரப்பகுதிகளில் வசித்த அக்கால அரபியர்களிடத்தில் ஒரு வழக்கம் இருந்தது. நல்ல உடற்கட்டுடன்கூடிய ஆரோக்கியமான தேகத்தையும், நாட்டுப்புற அரபியரின் தூய பேச்சுத்திறனும், பெற்று வளர வேண்டும் என்பதற்காக, தங்கள் பிள்ளைகள் தூய்மையான ஆரோக்கிய மிக்க சூழல் கொண்ட பாலைப் பிரதேசப் பகுதிகளில் வளர அனுப்பி வைப்பர். ஆவ்வாறே முஹம்மத் (ஸல்) அவர்களும், ஹலீமா பின்த் அபூ துஹைப் எனும் வளர்ப்புத்தாயின் பராமரிப்பில் அனுப்பி வைக்கப்பட்டபார்கள். அண்ணலார் (ஸல்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அல்-ஹாரிஸ், அனீஸா பின்த் அல்-ஹாரிஸ் மற்றும் ஜூதாமா பின்த் அல்-ஹாரிஸ் (அஷ்ஷைமா என்று அறியப்பட்டவர்) உள்ளிட்ட பல வளர்ப்பு சகொதர-சகோதரிகள் இருந்தனர்.
தாங்கள் மேற்கொண்ட முஹம்மத் (ஸல்) அவர்களின் வளர்ப்பு மற்றும் பராமரிப்பின் காரணமாக, ஹலீமா அவர்களும் அவருடைய குடும்பத்தாரும் எத்தகையதொரு, நற்பாக்கியம் பெற்றார்கள் என்பதற்கு வரலாறு சான்று பகருகின்றது. ஹலீமா அவர்கள் மக்கா-வுக்கு வந்தபோது பிரயாணம் செய்து வந்து கழுதை மிகவும் ஒல்லியாக, ஏறக்குறைய நோஞ்சானாக இருந்தது. ஆனால், என்ன ஆச்சர்யம், தனது சக பிரயாணிகளை முந்திச் செல்லும் வண்ணம், அத தனத பழைய வேகத்தை மீண்டெடுத்தது. அவர்கள் தமது, சொந்த இடத்துக்கு திரும்பிச் சென்று பார்க்கையில், அதிர்ஷட காற்று அங்கு விச ஆரம்பித்திருந்தது. காய்ந்து தரிசாய் அருந்த அவர்களின் நிலம், புற்கள் நிறைந்து செழிப்படைந்திருந்தது. கால்நடைகள் அவர்களிடத்தில் திரும்பி வந்தன. பெருமளவு பாலும் கறந்தன. அண்ணலார் (ஸல்) அவர்கள் இரு ஆண்டுகள் வளர்ப்புத் தாயிடம் இருந்தார்கள். பின்னர், ஹல}மா, அவரை அன்னாருடைய தாயாரிடத்தில் கொண்டு சென்றார்கள். இன்னும் சிறிது காலம் அக்குழந்தை தன்னுடன் தங்க அனுமதி கோரினார்கள். அவருடைய விருப்பப்படியெ , குழந்தை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது நாக்கு அல்லது ஐந்து வயது வரை அவர்களுடன் தங்கியிருந்தார்கள்.
ஒரு நாள்..! வானவர் தலைவர் ஜிப்ரீல் (அலை) அவர்கள், அன்னாரிடத்தில் வரகை தந்து அவரடைய நெஞ்சைப் பிளந்து, இருதயத்தை வெளியிலெடுத்து, அதனில் இருந்த ஒரு இரத்தக்கட்டியை தனிப்படுத்திவிட்டுக் கூறினார்கள்: இது ஷைத்தானுடைய பகுதியாக இதில் இருந்தது’. பின்னர், அதனை ஒரு தங்கப் பாத்திரத்தில் இட்டு ஜம்ஜம் நீரினால் கழுவினார்கள். பின்னர், இருதயப் பகுதிகள் இரண்டம் இணைத்து மீண்டும் அதற்குரிய இடத்தில் வைக்கப்பட்டது. சிறுவர்களும் அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களின் விளையாட்டுத் தோழர்களும், ஹலீமா-விடம் ஓமோடி வந்து முஹம்மத் கொலை செய்யப்பட்டுவிட்டார்’ என்று கூறினார்கள்.அனைவரும் அவரை நோக்கி ஓடினார்கள். அவரை நலமுடன் இருக்கக் கண்டார்கள். அன்னாருடைய முகம் மட்டும் வெண்மை படர்ந்து காணப்பட்டது.
இந்த சம்பவத்துக்குப் பின்னர், அந்தக் குழந்தை குறித்து, ஹலீமா அவர்களைக் கவலை பீடித்துக்கொண்டது. எனவே, அவர், குழந்தையை அதனுடைய தாயிடத்திலேயே விட்டுவிட்டார்கள். அக்குழந்தை தனத ஆறாம் வயது வரை, தன் தாயுடனே வளர்ந்தது.
மறைந்த தனது கணவரின் நினைவாக, ஆமீனா அவர்கள், அவருடைய அடக்கஸ்தலத்தை தரிசிக்க யத்ரிப் (மதீனா) சென்றார். ஐநூறு கி.மீ. தொலைவு கொண்ட இந்த பிரயாணத்தை தனது அநாதைக் குழந்தை, பணிப்பெண் உம்மு ஐமன் மற்றும் மாமனார் அப்துல் முத்தலிப் ஆகியோருடன் மேற்கொண்டார் ஆமீனா! ஒரு மாதம் வரை அங்கு கழித்து மக்கா திரும்பும் வழியில் கடும் நோய்வாய்ப்பட்டார்கள். மக்கா மற்றும் மதீனாவுக்கு இடைப்பட்ட சாலைப்பகுதியில் அப்வா எனும் இடத்தில் காலமானார்கள்.
கருணையுள்ளம் கொண்ட தன் பாட்டனாருக்கு..!
அப்துல் முத்தலிப் தனது பேரனை மக்காவுக்கு திரும்ப அழைத்து வந்தார். அநாதையாகி நிற்கும் தனது பேரனுக்கு ஏற்பட்ட (தாயாரின் மறைவு எனும்) கடுந்துயரம், கடந்த காலங்களில் இந்த சிறுவன் கண்ட துன்பங்களைவிடவும் மிகவும் கொடியது என்பதை உணர்ந்திருந்தார். அதனால், அவர்பால், அப்துல் முத்தலிப் அவர்கள் மென்மையான இதயம் கொண்டவராக இருந்தார். தனக்குப் பிறந்த குழந்தைகளைவிடவும் சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது அளவிட முடியாத இரக்கம் கொண்டிருந்தார். எந்த நிலையிலும் தான் ஒரு அநாதை என்பதை அந்த சிறுவன் உணர்ந்துவிடக் கூடாது என்பதில் அதீத அக்கறை கொண்டிருந்தார். தன் சொந்த பிள்ளைகளைவிடவும் அவர் மீது அதிக விருப்பம் கொண்டிருந்தார். கஅபா-வின் நிழலில், அப்துல் முத்தலிப் அவர்களுக்காக விரிப்பு ஒன்று விரிக்கப்பட்டிருக்கும். தமது தந்தைக்கு கண்ணியம் அளிக்கும் வண்ணம், அவருடைய பிள்ளைகள் அந்த விர்ப்பைச் சுற்றி அமர்வார்கள். ஆனால், அந்தவேளை, சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களுடைய இருப்பிடமோ, அந்த விரிப்பாக இருக்கும். அவருடைய சிறிய தந்தையர் சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களை, அந்த விரிப்பிலிருந்து அப்புறப்படுத்துவார்கள். ஆனால், அவ்வேளை அப்துல் முத்தலிப் அங்கு இருந்தால், ‘எனது பெரனை விடுங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! இந்த சிறுவன் குறிப்பிடத்தக்க மதிப்பைப் பெறுவான்’. தனது பேரனை அந்த விரிப்பில் மீண்டும் அமர்த்துவார். அவனுடைய பின்புறத்தில் அன்பாகத் தட்டிக்கொடுப்பார். சிறுவனின் இத்தகைய செய்கையால், எப்போதும் மகிழ்ந்தவராக இருப்பார் அப்துல் முத்தலிப்!
அந்தோ! ஆந்த சிறுவனின் வாழ்வில் மீண்டும் ஒரு துயரம். சிறுவன் முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு எட்டு வயது நிரம்பியபோது, மக்காவில் அவருடைய பாட்டனார் அப்துல் முத்தலிப் அகால மரணம் அடைந்தார். இப்போது, முஹம்மத் (ஸல்) அவர்களைக் கவனிக்கும் பொறுப்பு, அன்னாருடைய சிறிய தந்தையும், தந்தையும் சகோதரருமான அப்துல் முத்தலிப்அவர்களை வந்தடைந்தது.
தனது சகோதரர் மகனை கவனித்துக்கொள்ளும் பொறுப்பை அபூ தாலிப், மிகச் சிறந்த முறையில் நிறைவேற்றினார். தனது சொந்த குழந்தைகளுக்கு இடையே, அவரை தனக்கு மிக்க விருப்பமானவராக முன்வைத்தார். மதிப்பும் மரியாதையும் கொண்ட தனித்த மனிதராக அந்த சிறுவனை அடையாளப்படுத்தினார். ஓன்றல்ல.., இரண்டல்ல.,! நாற்பது ஆண்டுகள் வரை, அபூ தாலிப் அவர்கள் தனது சகோதரர் மகனாகிய அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்கள்பால் அன்பும் ஆதரவும் கொண்டு அவரைப் பராமரித்தார். அனைத்து வகைகளிலும் அவருக்கு ஆதரவு நல்கி அவரைப் பாதுகாத்தார். எந்த அளவுக்கெனில், ஏனைய மக்களுடனான அவருடைய உறவு, அண்ணலார் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் அந்த மக்கள் கொண்டிருந்த நடத்தையின் அடிப்படையிலேயே அமைந்திருந்தது என்றால்.., பார்த்துக் கொள்ளுங்கள், எமது நாயகம் (ஸல்) அவர்கள் மீது அபூ தாலிப் கொண்டிருந்த அன்பை..!

Related Post